Wednesday, December 25, 2013

என் ஊரை காணவில்லை...

நான்கு திசையும் வயல்கள்
நாலாபுற‌மும் குளங்கள்
ஊர் மத்தியில் அம்மன்
ஆலயம் எல்லை புறத்தில்
வீர‌ பத்திரர்
பைரவர்
அய்யனார் ஊரை காக்கும்
கடவுள்களாய்.....!!!
சிறு படகுடன் நிறைந்த‌
கடற்கரை தொலைதூரத்தில்
உடைந்த‌ கட்டுமரங்களும்
ஆங்காங்கே சிதறிகிடக்கும்
வரையறுக்கப்பட்ட‌ குடிசைகள்
கிராமிய‌ பண்பாட்டை
மாற்றாத‌ வாழ்க்கை முறை....!!!
மாலை நேரத்தில் ஆலமரத்தடி
அறிவு தாத்தாக்களின் மன்றம்
மழைக்கு கூட‌ பாடசாலை
பக்கம் ஒதுங்காதவர்கள்
புராணக்கதையிலும்
உலக‌ நடப்பிலும்
படிக்காதமேதைகள்.......!!!
பச்சை மரமொன்றில்
பழங்கள் எதுமில்லை
கறுப்பாய் ஒரு கனி
அதன் பெயர் தேன் கூடு
அதற்கு ஒரு கல்லால் எறிந்து
தேனிகலைக்கும்போது
தலை தெரிக்க‌ ஓடும் சிறார்கள்....!!!
இத்தனையும் அனுபவித்து சுவைத்த‌
அற்புத‌ மனிதன் நான்
காலம் கடந்து என் பிள்ளையுடன்
என் ஊருக்கு போனேன் கனவுகளுடன்
அம்மன் கோயில் இராஜ‌ கோபுரத்தை
காணவில்லை ‍சிறு கூடாரத்துக்குள்
முடங்கி இருந்தால் என் தாய்
காவல் தெய்வங்கள் இருந்த‌
கால‌ சுவடியை கூட‌ காணவில்லை ......!!!
என் கனவு மட்டும்
தவுடு பொடியாகவில்லை
என் ஊரும் தவுடு பொடியாகிவிட்டது
ஆலமரம் கூட‌ அங்கவீனமாய்
கிளைகள் உடைந்த்த‌ நிலையில்
வீடுகள் எல்லாம் துப்பாக்கி
துளையால் அரிதட்டானது
ஓடி விலையாடிய‌ வயலுக்குள்
இறங்க‌ விரும்பினேன் அருகில்
ஒரு பலகை ..கவனம்
வெடிக்கும் இறங்காதீர் இறங்காதீர்....!!!
என் ஊரை காணவில்லை
என் உறவுகளை காணவில்லை
ஓடி விளையாடிய‌ என் நண்பர்களை
ஓரிரு இடங்களில் புகைப்படத்தில் பார்த்தேன்
இது கவிதை இல்லை நான் நேரில்
கண்ட‌ அனுபவித்த‌ துன்பங்கள்
தூரத்தில் என் பழைய‌ நண்பன்
ஓடி வந்து கட்டிப்பிடித்தான்
முடியவில்லை அவனால்
ஒரு கை இல்லை .......!!!

என் மழைத் தோழியுடன்..!!!

நேற்று
ஊரெங்கும் கதவடைப்பு
தென்றலது ஜன்னலை தட்டிட
எட்டி பார்த்தேன் ...!!!!
என் தோழியவள்
விண்ணுலக தேவதை
மண்ணுலகம் வந்திருந்தாள்..!!!
மகிழ்ச்சியில் மயிலாகி
தோகை விரித்து ஆடினேன்
ஆனந்தத்தில்
அகவை குறைந்தது கணிசமாக
பத்து வயது
பட்டாம் பூச்சியானேன்..!!!
சிறகடித்து
கட்டியணைத்தேன் நெஞ்சோடு
அள்ளி முத்தமிட்டேன்
அவளின் கோள உடலெங்கும்..!!!
தொட்டால் சிதைந்து போகும்
பளிங்கும் மேனி பாவையவள்
பிரம்மன் படைக்காத அதிசியமே..!!!
வானுக்கும் பூமிக்கும்
நீர் பாலமமைத்து
நிலமகளை நீராட்ட வந்த
திரவ தேக முத்தவள்...!!!
பயண களைப்பிலே
படுத்துறங்கினாள்
பூமகளின் மடியிலே..!!!
நொடியில் துயில் கலைத்து
புறப்பட்டாள்
கொஞ்சம் ஓய்வெடு என்றேன்..!!!
ஓய்வா ..?? எனக்கா..??
நான்
வீட்டிலே அடைந்து கிடக்க
பூலோக கன்னியுமல்ல
படிக்கையிலே படுத்து கிடக்க
பொறுப்பில்லா பாலகனுமல்ல
படி தாண்டி வா என்னோடு
கடமைகள்
மலையாய் குவிந்துள்ளதென்று
கனத்த குரலில்
கன்னத்தில் அறைந்தாள் ..!!!
புறப்பட்டேன் அவளோடு...
வழியில் நின்ற தடைகளை
உளியின்றி உடைத்து
தன்னோடு கட்டியிழுத்து
சீறிப் பாய்ந்தோடினாள்..!!!
மனித கிருமிகளால்
தாவரங்களுக்கு இரத்தசோகை
வேர்களில் ரத்தமாய் பாய்ந்து
நோய் தீர்த்தாள்...!!!
வெட்டிய மரத்தின்
உயிரில்லா விதைகளுக்கு
தன்னை மண்ணில் மரித்து
உயிர் கொடுத்தாள் ...!!!
குளம் குட்டைகளில் நிரம்பி
பாலையான விவசாயின்
கண்களை சோலையாக்கினாள்...!!!
கட்டியிழுத்து வந்ததை
தங்க துகளாக்கி
கரையெங்கும் தூவி
கடல் அன்னையோடு கலந்தாள்..!!!
கடமை முடியவில்லை
மேக கன்னிகளோடு
மீண்டும் வருவேனென்று
பருதியின் பார்வையிலே
உடன்கட்டை ஏறி
ஆவியாகி பறந்தாள்..!!!
கடற்கரையில் தனி மரமாய்
நின்றிருந்தேன்
தோழியவளின் வருகைக்காக..!!
-------சுதா--------