Sunday, November 23, 2014

ஓர் இளவெயில் மாலையில்...

கடற்கறையின் கிழக்கு பக்கம் திரும்பி நான்
மேற்கு பக்கம் திரும்பி அவள் - அருகருகே அமர்ந்திருந்தோம்...
பேசிக்கொள்ளாத உதடுகள் கூட சிரித்துக்கொண்டன.....
ஆணின் சிரிப்பில் ஓர் அர்த்தம்
பெண்ணிண் சிரிப்பிலோ ஆயிரம் அர்த்தம் - சில
அலாதி அர்த்தங்களை அன்று உணர்ந்தேன்.....
ஓர் பார்வையை வீசிவிட்டு அமைதியாக நின்று விட்டாள்
அலைகளை வீசிவிட்டு அமைதியாய் நிற்கும் கடலை போல...
உன்னை தீண்டி உப்புக்காற்று உன்னை தாண்டி என்னை
தீண்டும் போது கூட உப்புக்கற்றில் உன் வாசம் தானடி...
மறைந்து போகும் கதிரவன் மறந்து போய் என் கையை தீண்டும் முன்
என் விரல்களை தீண்டியது உன் கை விரல்கள்...
நேரெதிர் மோதிக்கொள்ளும் நம் முகத்திற்கிடையில் உன்
கடைவிழியில் எட்டிப்பார்க்கும் சிறு துளி கண்ணீர்...
உன் கடைவிழி கண்ணீருக்கும்
என் விரல்களில் பதிந்த அழுத்ததிற்கும்
வார்த்தை இல்லாத உன் பார்வக்கும்
அர்த்தம் தேடி அலைந்து சென்றோம் காதல் எனும் உலகிற்குள்......
# _தஞ்சைசத்யா_

Saturday, November 22, 2014

மூன்றாம் உலகம்

காதலும் நட்பும் பிரித்தெரிய தெரியா
அந்த ஒரு நிமிடத்தின் உலகம்....
நமக்கே தெரியாமல் ஆசையும் பேராசையாகும்
அந்த ஒரு நிமிடம்....
தனிமையிலும் துணையிருக்கும் சில நிமிடங்களின்
அந்த ஒரு நிமிடம்....
காரணமில்லாமல் காலங்கள் செல்லும்
அந்த ஒரு நிமிடம்....
வெற்றிகள் குவியும் போது வலிகள் மறையும்
அந்த ஒரு நிமிடம்....
வலியிலும் வாழ்த்து சொல்லும்
அந்த ஒரு நிமிடம்...
இரவும் பகலும் இணைந்திருக்கும்
இந்த ஒரு நிமிடம்.....
# மூன்றாம் உலகம் தொடரும்........