Monday, May 5, 2014

கோடை மழையின் குளிர்ந்த காற்றில்.....

கோடை மழையின் குளிர்ந்த காற்றில்.....
மொட்டை மாடியின் மழையின் சாரலில்
நினைவுபடுத்திக்கொண்டிருந்தோம்.....

உன் பிறந்தநாளில்.....
என் பிறந்தநாளில்.....
காதலர் தினத்தில்.....

நீ எனக்கு கொடுத்த கடிதங்களையும்.....

நான் உனக்கு கொடுத்த
முத்தங்களையும்.....

மீனின் ரணம்

விழுங்கிய மீனின் முள் தொண்டையில் குத்தும்போது உணர்கிறேன்.....

தூண்டிலில் மாட்டிய மீனின் ரணத்தை......

உன் அழகே தனிதானடி.......

ஒரு கோப்பை தேநீரும்
உன் புன்னகையும் போதுமடி...
உன் மடியில் தலை சாய்த்து
என் தலைக்கோதி
என் உச்சிமுகர்ந்து
அனிச்சையாய் நீ செய்யும்
அழகே தனிதானடி.......

யார் குருடன்?.....

வாசலில் நிற்கும் 
குருடனை 
கடந்து போய் 
கோவிலின்
உண்டியலில்
போடுகிறோம் பணம்....

இதில்

யார் குருடன்?.....

வேறொன்றும் இல்லை......

எத்தனையோ பல்லவி இருந்தும் உன்

"ச்சீ" போடா என்ற முனகலுக்கு
இணை வேறொன்றும் இல்லை......

எத்தனையோ இசையை நான் கேட்டிருந்தாலும் உன் 

சேலை சலசலப்பிற்கு இணையான இசை வேறொன்றும் இல்லை......

திகட்ட திகட்ட காதலிப்போம்....

பூமியை வானம் புனரும்
காலை மழையில்.....
மெல்லச்செத்து மெல்லச்செத்து
மீண்டும் வா 
திகட்ட திகட்ட காதலிப்போம்....