Tuesday, February 28, 2017

அந்த சிலரில் ஒருவர் தான் சுஜாதா...

பலரது எழுத்துகளை ரசிக்கலாம், சிலரோடுதான் நாமும் கூடவே அனுபவித்து பயணிக்க முடியும். அந்த சிலரில் ஒருவர் தான் சுஜாதா...

இறுதிசுற்று படம் பார்த்தபோது இந்த கதையை அப்படியே உள்டாவாக பார்த்தால் எங்கையோ படித்த ஞாபகம் "10 செகண்ட் முத்தம்" சுஜாதா நாவல் தான் அவ்வளவு ஏன் பி.வி.சிந்துவிடம் மொபைலைத் திருப்பிக் கொடுத்தார் பயிற்சியாளர் கோபிசந்த்... ஐஸ்க்ரீம் சாப்பிட அனுமதி அளித்தார்னு செய்தி படிச்சப்போ அதே 10 செகண்ட் முத்தம் கதைதான்...

சொர்க்கத்தீவு மனிதனுள் சிப்பை வைத்து கணிணியின் மூலம் மனிதர்களை ஆட்டுவிக்கும் ஒருவகை science fiction நாவல்தான். ஏறத்தால முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாவல் என நினைக்கிறேன். "நூற்றுக்கணக்கான வருஷங்களாக நாம் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் சம்பிரதாயங்களையும் மூட நம்பிக்கைகளையும் தகர்த்தெறியும் போர், வீடு, நிலம், பணம், துக்கம்,  அழுகை,  என்னுடையது,  உன்னுடையது,  காதல்,  காமம்,  வெறி,  சமூக ஜாதி,  கதை,  கட்டுரை,  நிஜம்,  பொய்"…  இவை ஒன்றும் இந்த தீவில் கிடையாது.. இது தான் நாவலின் மைய கருத்து... எலக்ட்ராங்கள் ஒளிரும் திரை என்று அழகாக வர்ணித்துருப்பார் சுஜாதா..

சமீபத்தில் திரைக்கு வந்த சைத்தான் திரைப்படமும் சுஜாதாவின் "ஆ" நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் தான். ஜெயலட்சுமியை கொலை செய்தும் அவன் கொலை செய்யவில்லை ஆன்மாதான் அவனை கொலை செய்ய தூண்டியது என்று வாதாடி விடுதலையையும் வாங்கி கொடுத்திடுவார்... (பன்னீர் செல்வத்தை ஆன்மா தூண்டியதே அதைபோல)
"நில்லுங்கள் ராஜாவே" நாவல் உளவியல் நாவல் தான். ஒரு மனிதனின் ஆழ்மனதின் வழியேசென்று கொலை செய்ய பயண்படுத்துகிறான் என்பதே கரு.

நிர்வாண நகரம் சமீபத்தில் படித்து முடித்தது துப்பறியும் கதைகளில் மறக்க முடியாத கதை. தனது அறிவையும், படிப்பையும் மதிக்காத சமுதாயத்தின் மேல் கோபம் கொண்ட ஒரு பட்டதாரி இளைஞன் தான் சிலரைக் கொலை செய்ய போவதாக காவல்துறை அதிகாரிக்கே கடிதம் எழுதுகிறான். அவன் கடிதத்தில் சொல்லியது போல் கொலைகளும் நடக்கின்றன. ஆனால் கொலைகளை அவன் செய்யவில்லை இதான் கதை...

"எதையும் ஒருமுறை" ஒரு பெண் கொலையாகி கிடக்கிறாள் அது தற்கொலை என்கிறது போலீஸ் ஆனால் அந்த கொலையில் ஒரு சின்ன நூலை பிடித்து கொலைகாரனை பிடிக்கையில் இவன் தான் கொலை காரன் என் நிரூபிக்க ஆதாரம் இருக்காது. அதன் முடிவு இவ்வாறு வரும் எதையும் ஒருமுறை என வாழும் இவன் தற்கொலையையும் எதையும் ஒருமுறை என செய்துகொள்வான் என்று... ஒரு உதாரணம் மட்டுமே இவை இன்னும் எவ்வளவோ இருக்கின்றது..‘தப்பென்ன பனியன் சைஸா.. ஸ்மால், மீடியம், லார்ஜ்னு.. விளைவோட சைஸைப் பாருங்க’ என்று அவர் எழுதியது ஓர் உதாரணம்.

இன்றைக்குப் பேசப்படும் பொருட்கள் எல்லாவற்றிற்கும் எளிய முறையில் அவரிடமிருந்து விளக்கங்கள் வந்து விழுந்திருக்கும்.  வாட்ஸப் வதந்திகளுக்கு சாட்டையடி பதில்கள் வந்திருக்கும். சட்டென்று தெறிக்கும் ட்விட்டுகள் இருந்திருக்கும். இவற்றின் எதிர்காலம் குறித்தும் பேசியிருப்பார்...

பலரது எழுத்துகளை ரசிக்கலாம், சிலரோடுதான் நாமும் கூடவே அனுபவித்து பயணிக்க முடியும். அந்த சிலரில் ஒருவர் தான் சுஜாதா...

Wednesday, February 22, 2017

எதிர்மறை எண்ணங்களைத் தகர்த்தெறிய சில வழிகள் ... #MotivateYourSelf #vikatan

ஒவ்வொரு செயலுக்கும் இன்னொரு எதிர்வினை இருக்கும். அது நல்லதாகவும் இருக்கலாம்; கெட்டதாகவும் இருக்கலாம். இப்ப நியூட்டன் நியாபகத்துல வராரா? ''For every action there is an equal and opposite reaction'' என்று ஒன்பதாம் வகுப்பில் படித்திருக்கிறோமே, அதுதாங்க. ஒவ்வொரு செயலைச் செய்யும் பொழுதும், அதைச் செய்யலாமா வேண்டாமானு குழப்பமாக இருக்கும். ''லவ் பண்ணலாமா, வேண்டாமா?'' என்பது போல தான் இதுவும். இந்த ‘வேண்டாம்’ என்று சொல்லும் எதிர்மறை எண்ணம் இருக்கு பார்த்தீங்களா, அதை எப்படி அகற்றலாம்னு நாம யோசிப்போம். அப்படி அகற்றணும்னு நீங்க யோசனை செய்தவர்களாக இருந்தால், இதைப் படிச்சாலே போதும்… முதல் படியைத் தொட்ட மாதிரி....   
MotivateYourSelf
•    எப்பொழுதுமே நல்ல செயல்கள் நடந்து கொண்டிருக்கிறதென்றால், அதை அதன் பாட்டிற்கு விட்டுவிட வேண்டும். அப்படி விடும்பொழுது, நம்முடைய உள்மனதில் ஒரு குரல் ஒலித்து கொண்டே இருக்கும். அது என்ன சொல்லும்னு, என்னைவிட உங்களுக்கே தெரியும். நல்லதைக் கெடுப்பதற்கென்றே அது பேசும். அப்படி அது பேசுவதை எல்லாம் நாம் காது கொடுத்து கேட்காமல், நமக்கு நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் செயல்பட்டு வருகிறோம் என்றாலே கொஞ்சம் பெட்டராக இருக்கும். 
•    அந்த உள்மனம் பேசுகின்ற எதிர்மறை சொற்களுக்கு எதிராக, நீங்க எதையாவது செய்து பாருங்களேன். அது தானாகவே... கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிவிடும். 
MotivateYourSelf
•    ஒரு குறிப்பிட்ட சொற்களை நீங்கள் அதிகம் பேசுவீர்கள். அதைக் கொஞ்சம் உல்டாவாக்கிப் பாருங்கள். அதாவது என்னால் முடியாது, மாட்டேன், நடக்காது, வேண்டாம்; இப்படிப் பேசுவதையெல்லாம் கொஞ்சம் பாசிட்டிவாக மாற்றிப் பாருங்களேன். அந்த எதிர் சொற்கள் எல்லாம் காணாமல் போய்விடும். 
MotivateYourSelf
•    எதையும் பிளான் செய்து செயல்படுத்த வேண்டும். நாம் ஒரு பிளான் இல்லாமல் ஒரு செயலைச் செய்தால், இந்த எதிர்மறை எண்ணம் இருக்குப் பாருங்க... அது போதும் விட்டு விடு என்று முட்டுக்கட்டை போடும்; அப்புறம் நாம அதை ஃபாலோ செய்ய நேரிடும். அதனால் எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருந்தால், அதைத் தொடர்ந்து நடக்கும் செயல்களும் சிறப்பாக முடிவடையும். அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியில் நீங்கள் மூழ்கிப் போவீர்கள் என்பதே நிதர்சனம். 
•    சத்தமாகப் பேசப் பழகிக் கொள்ளுங்கள். அதற்காக நடு ராத்திரியில் எழுந்து கத்தக் கூடாது; வெளியில் ஒரு சிலவற்றை சத்தமாகப் பேசினாலே, நமக்குள்ளே சன்னமாகப் பேசுகின்ற அந்த எதிர்மறைக் குரல் காணாமல் போய்விடும்.  பாசிட்டிவ் எண்ணத்தைக் கொண்டு, நெகட்டிவ் எண்ணத்தை நீங்களே சுயமாக முறியடிக்க முடியும். அதற்கு ஒரு தூண்டுகோலாக உங்கள் கான்ஃபிடெண்டான பேச்சு இருக்கும்.
MotivateYourSelf
•    உங்க எண்ணம், முழுமையான நீங்களில்லை; அது உங்களது வெற்றிக்கான ஒரு தூண்டுகோல் தான்; எனவே அதனை நல்லதாக வைத்துக் கொள்ளுங்கள். பிறரது எண்ணங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பது போல, நம்முடைய எண்ணத்தையும் பிறரால் கட்டுப்படுத்த முடியாது. அதனால் நம்மை, நம் எண்ணங்களை நாம்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்; எனவே உங்க எதிர்மறைகளை, மனசுக்கு ஆதரவு தரும்படி மாற்றினால், உங்களுக்கு அதைவிட பெஸ்ட் ஃபிரெண்ட் யாராகவும் இருக்க முடியாது.