Monday, December 21, 2020

அவள் தேவதையா! யட்சியா!!

சண்டைகளின் போது

சமாதானம் செய் என

உட்காரும் போதுதான் 

அவள் 
தேவதையா
யட்சியா
பேயா
குழந்தையா
காளியா

எனும் உக்கிரமான கேரக்டர்  வெளிப்படும்!

அது அவளை சமாதானம் செய்ய போகிறவனுக்கு மட்டுமே காட்சியும் தரும்!

Sunday, December 6, 2020

ரூஹ் - லக்ஷ்மி சரவணகுமார்

 

’ஒவ்வொரு மனுஷருக்கும் ஒரு குணம் இருக்குடா. அதுதான் அவங்க. அவங்கள அப்படியேதான் நாம ஏத்துக்கனும். ஒரு மனுஷனுக்காக இன்னொரு மனுஷன் தன்ன மாத்திக்கக் கூடாது. ஒவ்வொரு மனுஷனுக்கும் வழி கடவுள் குடுத்தது. அவருக்குத் தெரியும் நாம செய்ற நல்லது கெட்டது என்னன்னு.’

ரூஹ் - லக்ஷ்மி சரவணகுமார்

அஹமத்ங்கற மாலுமி தொலைச்ச ஒரு அற்புதம் தன் வாழ்நாள்ல ஒரு அற்புதம் நிகழ்ந்து  நம்ம வாழ்க்கை மாறாதன்னு தவிச்சிட்டு இருக்குற ஜோதிக்கு கிடைக்கும் போது என்னவாச்சி இந்த ரூஹ் நாவாலோட one line.

ராபியா - ஜோதிலிங்கம் ரெண்டு பேருக்குமான  வயசு வித்யாசம் அதிகமா இருந்தாலும் , ரெண்டு பேரும் இன்னொருத்தங்களுக்கு  என்னவா இருந்தாங்க ,  என்னவா நெனச்சாங்க,  கடைசியா என்னவா  மாறுனுங்க தான் நாவலோட  காட்சிகள்.

ஜோதியாய்  நம்மை நினைக்க  வைக்கும் சில சந்தர்ப்பங்கள்  இந்த நாவல்ல இருக்கு, அதுவும் ஏதோ ஒரு விஷயத்துக்காக குற்றயுணர்ச்சி இருக்குறவங்களுக்கு கதையோடு ஒன்றிணைய  பல இடங்கள்  இருக்கு.. ராபியா எல்லோருக்கும் நன்மை நெனைக்குற நிபந்தனையற்ற அன்பை கொடுக்குற தேவதை.

சுருக்கமா சொல்லனம்ன்னா ராபியா மாறி ஒருத்தர் நம்ம வாழ்க்கையில இருந்தா அது அன்பு நெரஞ்சதா இருக்கும்.

 "அப்டி இருக்குற ராபியாவுக்கு கஷ்டம் கொடுக்குற மாறி ஜோதி பண்றான்.

லக்ஷ்மி சரவணகுமாரோட மொழியில சொன்னா

அள்ளிக்குடிக்க முடியுமென்பதற்காக மனிதன் கடலைக் குடித்துவிடத் துடிப்பது பேதமை. அவள் அன்பின் கடல்" 

வாழ்க்கையில யாரோட அன்பும் கிடைக்காம வெறுப்பும் , தாழ்வு மனப்பான்மையும் , வெறுமையில ஒருத்தன் தன் மேல அன்பா இருக்குறவங்க கிட்டவே தாக்கறதுக்கு காரணம் தன்னோட தாக்குதலை தடுக்க முடியா திராணியற்ற மனுசனா அவங்கள நெனைக்குறது தான்.

அற்புதங்கள் நடந்துட்டு தான் நாம அதை கவனிக்காம வேற எதையோ அற்புதம்னு நினைச்சிட்டு தேடிட்டு இருக்கோம். படிச்சி முடிக்கும் போது ஒரு பாவ மன்னிப்பு கிடைச்ச திருப்தி .லட்சுமி சரவணகுமாரோட உப்பு நாய்கள் மாறி பர பரன்னு ராவ்வான காட்சிகளா இல்லேனாலும் ,மனசுக்கு நெருக்கமான நாவல் ♥️

கதையிலும் ஒவ்வொருவருக்கும் ஒரு தேடல். அகமது, ராபியா, ரசூல், அன்வர், ஆங்கிரே, ஜோதி இப்படி எல்லோரும் ஏதோ ஒன்றைத் தேடி அலைகிறார்கள்.

அமைதி வேண்டுவோர் தனக்கான தேடலை மறக்கின்றனர். அகமதுவை போல. ஜோதியைப் போல. ஒரு வகையில் இருவரும் வேறல்லர் என்றே தோன்றுகிறது. உண்மை கண்டார் இறுதியில் உண்மையான இலக்கை சென்றடைகின்றனர்.

அன்பே அசல் தேடல். அன்பே அசல் இலக்கு.

அன்பை ஆராயும் எவரும் வாசிக்க வேண்டிய புதினம்

இப்படிக்கு இவன்

கடக்கும் 

நொடிகளிலும் நிமிடங்களிலும்

கிடைக்கும்

அனுபவங்களில் 

என்னை செதுக்கி

விடை தேடி ஓடுகிறேன்

கேள்விகளையும் சுமந்துகொண்டு!


எல்லைக்கோடுகளை 

உடைத்து விட்டு

எல்லையற்ற வானத்தில்

திரியும் பறவை இவன்!


இந்த உலகம் என்னிடம்

எதையோ நிரூபிக்க 

முயன்று கொண்டிருக்க

நான் 

அதனிடம் தோற்று போகிறேன்...!


இதுதான் என் 

கடைசி முயற்சி என்று,

ஒவ்வொரு முறை தோற்கும்போதும்,

மீண்டு எழுவதற்கு பழகியிருந்தேன்..!


இருள் விலகி ஒளி பிறக்கும் 

என நம்பிக்கையில்

இல்லையெனில்

இருளையே ஒளியாக்கி 

பயணங்களை தொடர்கிறேன்!


எல்லா வெளிச்சங்களும்

இருளின் பிரதிபலிப்பாக 

இருக்கும்போது இவன் மட்டும்

விதிவிலக்கா என்ன!


- சத்யா...