Sunday, February 23, 2014

தோற்றவனின் ரொட்டி துண்டுகள்....

தோற்றவனின் ரொட்டி துண்டுகள்
பறிக்கபடுகின்றன
கயவர்களால் அல்ல காரியக்காரர்களால்.....

தோற்றவன் தேடுகிறான்
தோற்றது எங்கே என்று
அவன் அதிகாரத்திற்கு துதி பாடவில்லை
ஆனாலும் தோற்கிறான்
அதிகார துதிபாடுபவர்களிடம்.....

தோற்றவன்
வேட்டை மிருகத்தை தவறவிடவில்லை
தடுமாறினான் துதிபாடியவனின்
காய் நகர்த்தலில்....

தோற்றவன் வலிகளை வர்ணிக்க வேண்டுமானால்
தோற்றது அவன் திறமையின் வெளிப்பாடு
அவன் திறமையில்லை.....

தோற்றவன் களைத்து போகவில்லை
அவன் திறமையும் தூங்கவில்லை
காரணம்
பத்தவில்லை இந்த ரொட்டி துண்டுகள்............

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

  • உன்னை அறிவில்லாதவன் என்று நீ எண்ணுவது தவறு
  • உன்னை அறிவில்லாதவன் என்று பிறர் சொல்வதை நம்புவது பெரும் தவறு
  • தன்னை நம்புபவர் அதிட்டத்தை நம்புவதில்லை
  • தன்னையே நம்பாதவர் அதையும் நம்புவதில்லை
  • விழவது நம் வாடிக்கை
  • வெம்பி நீ அழவதுதான் வேடிக்கை
  • தொழுவது நம் நம்பிக்கை
  • நம்பி நீ எழுவதுதான் தன்னம்பிக்கை
  • மூடனோ முடியாததை முடியும் என்று நினைந்து தோற்கிறான்
  • முடவனோ முடிந்ததை முடியாது எனப் பயந்தே தோற்கிறான்
  • கண்ணிலே நம்பிக்கை இருந்தால் கல்லீலே  தெய்வம் உண்டு
  • கையிலே நம்பிக்கை இருந்தால் வரலாற்றிலே பெயர் உண்டு
  • வெற்றி நிச்சயம் என்ற எண்ணமே வெற்றிக்கு முதல் இரகசியம்
  • தோல்வி நிச்சயம் என்ற அச்சமே தோல்விக்கு மூல காரணம்
  • உங்களது சந்தேகங்களையே சந்தேகித்து விரட்டுங்கள்
  • உங்களின் நம்பிக்கைகளின் மீதே நம்பிக்கை வையுங்கள்
  • என்னாலும் செய்ய முடியும் என்பது நம்பிக்கை
  • என்னால்தான் செய்யமுடியும் என்பது அகந்தை
  • பறக்கத் துணிந்தவருக்கு இறகுகள் பாரமில்லை
  • இறக்கத் துணிந்தவருக்கு மரணம் ஒரு பயமில்லை.                                 

போராட்டம்

  • விமர்சனம் என்பது கடல் பயணத்தின் தடை கல் விலகிச்செல்ல முடியும்
  • வீண்பகை என்பது சாலை பயணத்தின் தடை கல் தகர்த்தே செல்ல முடியும்
  • உரிமை மேல் ஆண்மை பாராட்டாதவர் சாந்தம்
  • பெருமை இல்லாத பிணத்தில் பிறந்ததோர் சாந்தக்குளிரே
  • உன் சுயசக்தியே உனது ஆயுதம் துஞ்சாமல் போராடு
  • உன் சுயபுத்தியே உனது ஆசான் அஞ்சாமல் போராடு
  • மயங்குபவர் மன்னராக முடிவதில்லை
  • தயங்குபவர் தலைவராக இருப்பதில்லை
  • கலங்குபவர் கலைகளில் சிறப்பதில்லை
  • கசங்குபவர் முண்ணனியில் வருவதில்லை
  • எடை இல்லாது விலையில்லை
  • நடை இல்லாது நாட்டியமில்லை
  • படை இல்லாது போருமில்லை
  • தடை இல்லாது வெற்றியுமில்லை
  • காவியினால் மட்டுமே வறுமைக்கு சாவி கிடைக்காது
  • கருணையினால் மட்டுமே ஏழ்மைக்கு தீர்வு கிடைக்காது
  • துடுப்பு இலொலாமல் தோனியில்லை
  • துணை இல்லாமல் பயணமில்லை
  • படி இல்லாமல் ஏணியில்லை
  • அடி வாங்காது ஏற்றமில்லை
  • கடல்கள் மையத்திலிருந்து பல புயல்கள் புறப்படுகின்றன‌
  • இதயத்திலிருந்து பல புரட்சிகள் புறப்படுகின்றன,

மனோசக்தி
  • தண்ணீரை வீணாக்காமல் சேமியுங்கள் நாளை இதை விட வறட்சி வரும்
  • கண்ணீரை வீணாக்காமல் சேமியுங்கள் நாளை இதை விட துயரம் வரும்
  • ஒரு நொடி அழும் போது மரணம் ஓரடி முன்னோறுகிறது
  • ஒரு நொடி சிரிக்கும் போது மரணம் ஒரடி பின்னேறுகிறது
  • கவ்விய கவலையும் துயரும் விட்டு விட்டால்
  • உலகு எல்லாம் சேரினும் நம் முன் தீயிலிட்ட பங்சே
  • சிதைந்த போதும் உரம் உடையோர் பதையார் சிறிதும்
  • புதைப்படும் கணைக்கும் புறம் கொடாது யாணை
  • அண்டத்தையே பிண்டமாக்கும் அழிவு சக்தி அனுவுக்குள்ளே
  • பிண்டத்தையே அண்டமாக்கும் ஆக்க சக்தி ஆன்மாவுக்குள்ளே
  • உள்ளத்திலே உறுதியிருந்தால் கை தொட்ட கல்லும் பொன்னாகும்
  • உடலிலே உழைப்பிருந்தால் காலன் பயமும் மறைந்து போய்விடும்
  • வீரமுள்ள மனிதனை கொல்ல முடியும் தோற்கடிக்க முடியாது
  • விவேகமுள் அறிஞனை விரட்ட முடியும் வீழ்த்த முடியாது
  • நல்ல தொழிலாளியிடம் கடின வேலை தருகிறார் முதலாளி
  • நல்ல இருதயத்திடம் தனது வேலையைத்தருகிறான் இறைவன்
  • தீராத பசியை விட ஒயாத உணவால் மாண்டவர் பலர்
  • ஒயாத உழைப்பை விட தீராத உறக்கத்தில் அழிந்தவர் பலர்
  • துயரத்தின் தீயில் இருந்தே பல மாமேதைகள் கருவானர்கள்
  • துன்பத்தின் சாம்பலில் இருந்தே பல மாமனிதர்கள் உருவானர்கள்

மனோதிடம்

  • குளிரிலும் கோடையிலும் சமமாக இருப்பது உடலின் வெப்பம்
  • குறையிலும் நிறையினும் சமமாக வாழ்வது மனிதின் நுட்பம்
  • துயரங்கள் சிலரை சுட்ட எஃகு போல உறுதியாக்குகிறது
  • தோல்விகள் சிலரை சுட்ட கடுகு போல சிதைத்து விடுகிறது
  • உடல் தளர்வது தோலில் ஏற்படும் காயம் போல‌
  • உளம் தளர்வது எலும்பில் ஏற்படும் முறிவு போல‌
  • பலமில்லாதவர்கள் பாதையின் கற்கள் தடைக்கற்கள்
  • பலமுள்ளவர்கள் பாதையின் தடைகள் படிக்கற்கள்
  • இத்தனி உலகிலே எத்தனை துயர் கண்டாலும் அத்தனையும்
  • நம் அழுக்கையெரித்து நல் சுவர்ணமாக சோதிக்கத்தானே
  • பிறவிக்குருடனின் பால் நிறம் கொக்கு போல என்றாணம் ஒரு மூடன்
  • சற்றே பாதையாதிருந்து பாரும் எதிலும் பேரின்பமே திகழும்
  • துயரென்பது நரி போல ஒடதுடத்துரத்தும் நின்றதும் நின்று விடும்
  • துன்பமென்பது நிழழ்போல ஒட ஒடத் தொடரும் நின்றதும் நின்று விடும்
  • கையகலமே அவன் கொடை
  • கருணை மனத்தின் அகலமே மாண்பு
  • கண்ண கலமே அவள் கல்வி
  • கலங்காத இதயத்தின் அகலமே அவன் வாழ்வு
  • திறமையான வாளுக்குத் தேவை உறுதியான கைப்பிடி
  • வலிமையான கைகளுக்குத் தேவை உறுதியான இருதயம்

அஞ்சாமை
  • தங்கத்தை தீயிட்டாலும் அதன் தரம் குணம் மாறுவதில்லை
  • அங்கத்தை தீயிட்டாலும் ஆன்றோர் பொய் பேசுவதில்லை
  • இழப்பு இல்லாமல் ஒரு லாபம் அடைய முடியாது
  • ஆபத்து இல்லாமல் ஒரு வெற்றி அடைய முடியாது
  • அஞ்சாமை என்பது தெளிந்த அறிவின் விளைவாகும்
  • துஞ்சாமை என்பது துணிந்த துணிவின் விளைவாகும்
  • அஞ்சாமையுடன் நெஞ்சிலிருந்து வீரத்திருமகள் கட்டியனைப்பான்
  • துஞ்சாமையுன் விழியிலிருந்தால் வெற்றித்திருமகள் வீட்டிலிருப்பான்
  • உழைப்பதற்கு முதுகு வளை
  • எதிர்ப்பவர்க்கு முதுகு வளைக்காதே
  • அறிஞருக்கு தலை வணங்கு
  • அறிவானுக்கு தலை குணியாதே
  • வளைந்து நெளிந்து குழைந்து தளர்ந்து வாழ்வது புழுவின் வாழ்க்கை
  • நிமிர்ந்து துணிந்து பாய்ந்து வளர்ந்து வெல்வது புலியின் வாழ்க்கை
  • கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாத கால்கள் ஊர் போய்ச் சேரும்
  • வில்லுக்கும் சொல்லுக்கு அஞ்சாத காதுக்கு புகழ் வந்து சேரும்
  • வளைந்து கொடுப்பவர் எந்தக் கதவுக்குள்ளும் நுழைந்து விடுவார்
  • நிமிர்ந்து நடப்பவர் எந்தத் தடையையும் தாண்டிவிடுவார்
  • அஞ்சாமை என்பது ஆண் முகத்தில் மீசை
  • ஆணவம் என்பது பெண் முகத்தில் மீசை

கொள்கை
  • பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கொள்கை வைக்கிறான்
  • பிறக்கும் ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஒரு செய்தி அனுப்புகிறான்
  • அற்புதமான இலட்சியத்திற்காக உதவியை உதறி விடு
  • அற்பனுன இலட்சியத்துக்காக இலட்சியத்தை உதறி விடாதே
  • அற்ப தூசுகள் காற்று வரும் போது பறக்கலாம் என காத்திருப்பார்கள்
  • அற்ப மனிதரும் அதிட்டம் வரும் போது ஆடலாம் என காத்திருப்பார்கள்
  • ஆடையை விட்டபின் கிடைத்தது வெற்றியுமல்ல‌
  • கொள்கையை விட்ட பின் அடைந்தது கோட்டையுமல்ல‌
  • கொள்கை என்பது பழமைக்கும் புதுமைக்கும் இடையே தடையாகக் கூடாது
  • குறிக்கொள் என்பது பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக வேண்டும்
  • துக்கத்துக்கு அழுவது முகம் துடைப்பது போல ஒரு பழக்கமாகி விட்டது
  • கொள்கையை பேசுவது மூக்கு சிந்துவது போல ஒரு வழக்கமாகி விட்டது
  • வெற்றி தொடர்ந்த போது பாதை மாறாதே
  • தோல்வி தொடர்ந்த போதும் கொள்கை மாறாதே
  • கொள்கை பிடிப்புள்ளவர் வாழ்வு நெடும் பயணத்தின் நீளம்
  • குரங்கு பிடிப்புள்ளவர் வாழ்வு செக்கு மாட்டின் வட்டம்
  • ஆடையை அவிழ்த்தவருக்கு பரிசு என்றால் யார் வெல்லுவார் தெரியாதா
  • கொள்கையை விட்டவருக்கு பதவி என்றால் யார் வெல்லுவார் தெரியாதா
  • இலக்கு இல்லாத கப்பல்கள் கரை சேர்வதில்லை
  • இலட்சியம் இல்லாத மனிதர்கள் வெற்றி காண்பதில்லை

உலக தத்துவம்

ஆஸ்கார் ஒயில்ட்…
  • அதிகம் உள்ளவர்கள் அதிகம் பேராசைக்காரர்களாக இருக்கிறார்கள்
  • அளவுக்கதிகமானது வெற்றியே மிதமானது யாவும் மாய்ந்துபோகும் 
  • அறக்கட்டளை நிதிகள் பல்வேறு பாவங்களுக்கு காரணமாகிறது
  • அறிந்து யார் மனதையும் நோகச் செய்யாதவனே கண்ணியவான்
  • அறையில் இரகசியமாக செய்த தவறுக்காக கூரையில் நின்று அழுவாய் ஒருநாள்
  • அனுபவங்களை கலையுணர்வுடன் ஏற்றுக் கொள்ளக்கூடியது ஆன்மா
  • ஆண் முகம் சுயசரிதை பெண் முகம்  கற்பனை காவியம் 
  • ஆண்கள் வருமானத்தை மட்டும் தருகிறார்கள் 
  • பெண்கள் அனைத்தையும் தருகிறார்கள்
  • ஆணின் முகம் சுயசரிதை பெண்ணின் முகம் நாடகக் கலை 
  • ஆரம்பத்தில் ஆணை தவிர்க்கிறார்கள் பெண்கள் 
  • முடிவில் தப்பிக்கவிடாமல் தடுக்கிறார்கள்
  • இசை என்ற சாவி உணர்வு ,நினைவு,கண்ணீர் கதவுகளை திறக்கும் 
  • இளமையில் பணம் தான் முக்கியம் என்பார் 
  • முதுமை அதை முழுமையாக உறுதி செய்யும்
  • இறைவன் மனிதனை படைத்த போது தனது திறமையில் தோற்றுவிட்டன்
  • இன்பங்களில் தன்மையானது மாயக்கற்பனையே
  • உண்மை உனர்வுகள் நல்ல கவிதையாகுவதில்லை
  • உலகத்துக்கு எதிரான கசப்பிலிருந்து மனதை விடுவித்து கொள்ள வேண்டும்
  • உன் அலமாரியை களவாடலாம் ஆன்மாவின் சொத்தை திருட முடியாது
  • உனது வாழ்வில் அறிவை பயன்படுத்து வேலையில் திறமையை பயன்படுத்து
  • எதிரியை மன்னியுங்கள் அதைவிட அவனுக்கு பெரிய அவமானமில்லை
  • ஏழைகள் அதிகம் நுட்ப உணர்வு உடையவராக இருக்கிறார்கள்
  • கயவருக்கு கடந்த காலமுண்டு புனிதருக்கே எதிகாலமுண்டு 
  • கருமிக்கு எல்லாவற்றுக்கும்  தெரியும் எதற்கும் மதிப்பு தெரியாது
  • காதலில் தோற்காமல் இருக்க் வேண்டுமானால் கல்யாணம் செய்யாதே
  • குழந்தைகளை மகிழ்வாய் வளர்ப்பதே அவர்களை நல்லவராக்கும் வழி
  • சபலத்துக்கு பலகீனமானவர்களை விட புத்திசாலிகளே வீழ்கிறார்
  • சபலத்தை தவிர மற்ற தூண்டுதல்களை நம்மால் வெல்ல முடியும்

  • சிலர் வரும் போது மகிழ்ச்சி சிலர் போகும் போது மகிழ்ச்சி
  • துயரம் தாம் வாழ்வின் உண்மையான இரகசியம்
  • தொடர்ந்து திருமணம் செய்யாது வாழ்பவர் அனைவருக்கும் தூண்டில்
  • நமது தவறுகளின் தொகுப்பே நமது அனுபவம்
  • நமது பிராத்தனையை நிறைவேற்றித்தான் ஆண்டன் நம்மை தண்டிக்கிறான்
  • நல்ல அறிவுரை இருந்தால் பிறருக்கு கொடுத்து அது நமக்கு பயன்படுவதில்லை
  • நல்ல நன்பர்கள் நல்லவர்/ அவர்கள் மார்பிலேதான் குத்துவார்கள்
  • நீ அன்பினை விரும்பும் போதுதான் 
  •  அது உனக்காக காத்து கொண்டிருப்பதை அறிவாய்
  • பகைவர்களை மன்னிப்பதே அவர்களை தண்டிப்பதற்கு சரியான வழி
  • பண்பாடு தனி மனித ஆளுமைப் பண்பினை ஆழ்ந்ததாக மாற்றியுள்ளது
  • பலன் தரும் அறிமுகம் நிசச‌சியம் நல்ல நட்பாக உருவாகும்
  • பாவங்களை விட வறுமையே குற்றங்களின் பிறப்பிடமாகும்
  • பாவத்தை விட வறுமையே குற்றங்களின் பிறப்பிடமாகும்
  • பிரம்மச்சர்யரியராக இருப்பவர்பொதுவாழ்வில் நிரந்தர சந்தையுள்ளவர்
  • பிறரும் தன் விருப்பப்படியே வாழவேண்டும் என்பது மோசமான சுயநலம்
  • பெற்றோர்களை குழந்தைகள் நேசிக்கிறார்கள் 
  • ஆனால் ஒரு போதும் மன்னிப்பதில்லை
  • பொதுமக்களுக்கு சகிப்பு அதிகம் அறிவாளிகளை மட்டும் மன்னிக்கமாட்டார்கள்
  • மற்றவர்களை ஏமாற்றும் வித்தையை வசிகரம் எனப் பெயரிடுகிறது உலகம்
  • மற்றவரை ஏய்ப்பதை உலகம் ஒரு பெரிய திறமையென கொண்டாடுகிறது
  • முதியவரின் சோகம் முதுமையினால் அல்ல இளமைக்கு ஆசைப்படும்
  • யாராக இருந்தாலும் 
  • தனது செய்கையால் அன்றி தன்னை அழித்து கொள்ளமுடியாது
  • யாருடைய மனதையும் தெரியாமல் கூட புண்படுத்தாதவன் புனிதன்
  • வலி என்பது மகிழ்ச்சியைப் போல முகமூடி போடுவதில்லை
  • வாதங்கள் வக்கிரமானவை தவிர்ப்பதே நல்லது 
  • வாழ்க்கையை கலைகள் சொல்வதை விட கலைகள் வாழ்வை  தொடர்கிறது
  • வாழ்வின் வேர் போன்றது காமம் 
  • அதை புரிந்து வாழ்வு என்பது அதில் முக்கியமானது 
  • வாழ்வென்பது புனிதப் பயணம் ஞானி ஒரு போதும் அக்கம் பக்கம் தங்குவதில்லை 
  • வெற்றி என்பது ஒரு விஞ்ஞானம் செய்முறையறிந்தால் விடை கிடைக்கும்

ஆன்டன் செக்கோவ்…
  • அன்பு, நட்பை விட ஒரு பொது வெறுப்பும்,பகையும் பலரை ஒற்றுமைபடுத்துகிறது
  • ஆன்மாவின் அணுகுமுறையே நம்பிக்கை அது உடன் பிறந்த திறமை
  • இரும்பைத் துரு போல ஆன்மாவை பொய் அழிக்கிறது
  • உபயோகபடுத்தப்படாத அறிவினால் எந்தப் பயனுமில்லை
  • உபயோகம் எதுவும் இல்லாததே பலருக்கு இன்பம் தருகிறது 
  • உயர்ந்த நோக்கம் உடைய போது செயலும் உயர்ந்து நிற்கிறது
  • சோம்பித்திரியும் வாழ்விலே தூய்மை இருப்பதில்லை
  • தத்துவம் மனோதத்துவமும் புரியாததை புரிந்து கொண்டது போல நடிக்கக் கூடாது
  • நடைமுறை வாழ்வு தத்துவங்களுக்குள் அடங்குவதில்லை
  • பிறர் துன்பங்களை நகைப்பவர் மன்னிக்கப்பட மாட்டார்கள்
  • பொய் உரைப்பதும் குடிப்பழக்கம் போல மாறுவதில்லை
  • ம்னித உறவுகள் மிகமிகச் சிக்கலாக்கி அச்சுறுத்துகிறது
  • மனிதன் என்பவன் அவன் நம்பிக்கையைபொறுத்தவன் 
  • மனிதன் மகிழ்ச்சியாக இருக்கும் போது மழையும் வெயிலும் தெரிவதில்லை
  • முகம் உடை உயிர் சிந்தனை யாவும் அழகாக இருக்க வேண்டும்

ஆவபரி..
  • அறிவுள்ள உயர்ந்த எண்ணங்களால் நிரம்பிய மனம் அமைதியாகும்
  • இலட்சியமில்லாத மனிதனிலக்கில்லாத கப்பலைப் போலத்திரிவான்
  • உலகம்  ஒரு கண்ணாடி நம்மையே அது பிரதிபலிக்கும்
  • கடல் போல் ஞானம் கிடக்க கரையில் சிற்பி பொறுக்கும் குழந்தைகள் நாம் 
  • கடினமான உழைப்பை விட கடுகளவு மனக்கவலை தளர்ச்சி தரும்
  • கடைசி துளி மனோதிடம் உள்ளவரை எவனும் தோற்கடிக்கபட மாட்டான்
  • செல்வத்தால் சன்மார்க்கம் வராது  அதற்காக வறுமையில் சன்மார்க்கம் வராது
  • பொறுமை மித மிஞ்சினால் பலகீனமாகி விடக்கூடாது
  • ரோஜா செடியில்முள்ளென வருந்தாது முள்ளில் மலரென மகிழ்வோமே
  • வறுமை என்பது குறைந்த செல்வம் என்பதை விட அதிக ஆசையே


ஆல்பர்ட்ஸ்விட்சர்…

  • அடுத்தவருக்கு வலி கொடுப்பதனால் உன் வலி தீர்ந்து விடுமா மனமே
  • அற்புதச்செயல்களை நிகழ்த்து அனைவரும் உன் பின்னால் வருவார்
  • உண்மைக்கு காலமில்லை ஏனென்றால் அது நிரந்தரமானது
  • உதவி செய்வதே மனித வாழ்வின் உன்னத லட்சியம்
  • கதிரானது பணியை உருக்குவது போல அன்பானது பகையைவெல்லும்
  • சூர்யன் பனியை உருக்குவது போல அன்பானது அவநம்பிக்கையை அகற்றும்
  • சேவை செய்ய முயன்று வென்றவரே நிரந்தர மகிழ்ச்சியுடனிருப்பார்
  • தீயது எதற்கும் பழக்கப்படாத மனிதனே வெற்றியாளன்
  • தூய ஆத்மாக்களால்  உலக வரலாறு உன்னதமானது
  • நமது ஆத்ம தீபம் மங்கும் போது எல்லாம் தூண்டி விடுபவர்களுக்கு நன்றி
  • பிறருக்காக வாழம் வாழ்வில் மகிழ்வும் புகழம் ஆயுளும் அதிகம் 
  • மகிழ்ச்சிக்காக வெற்றியில்லை மகிழ்ச்சி இல்லாதவனுக்கு வெற்றியில்லை
  • மலையில் வைத்த உருளும் பாறை போல வஞ்சம் மீண்டு வந்து தாக்கும்
  • மனிதன் ஒரு புத்திசாலியான மிருகம் ஆனால் முட்டாள் தனமாக வாழ்கிறது
  • மனிதன் தன்னையும் பூமியையும் அழிக்காமல் ஒழிய மாட்டான்
  • மனிதன் தான் உருவாக்கிய சைத்தான்களை அடையாளம் காண்பதில்லை
  • மனிதனின் படைப்புகள் 
  • இறைவனது படைப்புகளை விட அபத்தமானது ஆபத்துமானது
  • முன் உதாரணமாக இருந்து முன் செல்பவனே தலைவனாவன்


ஆல்பர்ட் கேம்ஸ்
  • அடைய வேண்டுமென்ற ஆசை அழிக்கமுடியாதது
  • உண்மை என்பது ஒளி போலக் கூசும் 
  • ஒவ்வொரு புரட்சியாளனும் இறுதியில் சர்வாதிகாரியாகச் சாகிறான்
  • கேட்காமலேயே உடன்பட வைக்கும் திறமையே கவர்ச்சி 
  • தர்மத்திற்கு உடன்படாத  மனிதன் அவிழ்த்துவிடப்பட்ட மிருகம்
  • தன்னைத் தானேஉணரக்கூடிய மனசக்தி உடையவனே ஞானி
  • நவீன மனம் முழமையாகக்  குழம்பிக் கிடக்கிறது
  • வாழ்வின் முட்டாள்தனம் இன்னொரு பிறவிக்கு ஏங்குவது


ஆல்டஸ் ஹக்ஸ்லி
  • அரசியலிலும் கூட ஒரு வித தத்துவ அமைப்பு ஒளிந்துள்ளது
  • அறிவை போதிக்கலாம் ஞானத்தை தானே தான் உணர வேண்டும்
  • இசை என்பது விஞ்ஞானமாக போதிக்கப்பட்டு இன்ப நோக்கத்தை மறந்தது
  • இசையென்பது மொழியாலும் மௌனத்தாலும் 
  • சொல்ல முடியாத செய்திகளைச் சொல்கிறது
  • உப்பு சப்பான உண்மையை உணர்ச்சியூட்டும் ஒரு பொய் வெல்கிறது
  • உப்பு சப்பில்லாத உண்மையை விட காரசாரமான மசால பொய் வியாபாரமாகிறது
  • காலம் தெளிவுபடுத்தும் அதுவரை நம்பிக்கையே நல்ல துணை
  • சுய தியாகங்கள் பல செய்யாது ஞானத்தை அடைய முடியாது
  • செயல்படுவதே கற்பதற்கு வழி அந்த செயல் நன்மையாக இருந்தால்
  • திறமைக்கு மாற்று ஈடு என்பது வேறு ஒன்றுமில்லை
  • புதிய கண்டுபிடிப்பும் ஆதிக்கத்தினரின் ஆதிக்கத்துக்கே உபயோகமாகிறது
  • மன்னிப்பு என்பது தண்டனையை விட கொடிது அவரது மனம் தண்டிக்கும்
  • மனித மனம் தன் உடல் உறுப்புகளுக்கு ஊழியம் செய்யும் அடிமை
  • மனிதர்கள் எதையும் இயல்பாக உறுதியாக எடுத்துகொள்கிறார்
  • மனிதன் அவனது உறுப்புகளுக்கு வேலை செய்யும் அடிமையில்லை
  • வலி என்பது நமது தனிப்பட்ட அபிப்ராயம்தான்
  • வார்த்தை எனும் ஙாலிலே நமது அனுபவ முத்துகளை கோர்க்கிறோம்
  • விரகத்தியை தாண்டி ஒருவனுக்கு எதிலாவது ஆர்வம் வந்தால் 
  • அவனுக்கு நிச்சயம் வெற்றி


ஆர்தர்ஸ்கோப்னர்
  • அறிவாற்றலும் ஞானமும் வலுப்பட கலைகள் உதவுகின்றன
  • இன்பம் என்பது கூட துன்பத்தின் தற்காலிக மறுப்பே
  • என்ன முயன்றாலும் மனம் தன் சிறையிலிருந்து வெளிவருவதில்லை
  • ஒருவனுடைய உதடுகளை விட முகம் தெளிவாகப் பேசுகிறது
  • ஒவ்வொரு விடியலும் ஒரு குட்டி பிறப்பு
  • சலுகைகளைப் பெற கொள்கைகளை விற்று பிழைக்கலாகாது
  • சிந்தனையின் சிம்மாசனத்திலே வக்ரமே அரசாள்கிறது
  • செல்வமென்பது  கடல் நீர் போல குடிக்க குடிக்க தாகமேறும்
  • ஞானத்தின் மூலமே மனிதன் துன்பத்திலிருந்து விடுபட முடியும்
  • தியாகத்தால் திறமையில்லாதவரும் புகழடையலாம்
  • துன்பத்தை தவிர்க்க இன்பத்தை கூட தியாகம் செய்யலாம்
  • நமது எண்ணம்  செயல் அனைத்துக்கும் ஆதாரமாய் உள்ள்து ஆசை
  • நல்லவருக்கும் நல்லவைகளுக்கும் உலகில் ஒரு காலமுண்டு
  • பெரிய சிறந்த மனிதர் பறவை போல தனிக்கூட்டிலே வாழ்வார்
  • பேருதவி செய்த மணைவியை கட்டிக் கொண்டு தூங்குபவனே மனிதர்
  • மரியாதயை வெல்வது முக்யமல்ல இருப்பதை இழக்காமலிருப்பதே நல்லது
  • மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது
  • வானத்தை குறிக்கோளாகக் கொண்டவனுக்கு வாழ்வு எளிது
  • விருப்பாற்றலை மீறி எழும் அறிவாற்றலே துன்பத்தை கடக்க உதவும்


ஆப்ரகாம்மாஸ்லோ
  • அச்சமில்லாது துணிவுடன் புதுமையை சந்திப்பனுக்கே எதிர்காலம் உண்டு
  • அனுபவத்தின் ஆற்றல் அறிந்தவரே வாழ்வின் அர்த்தம் புரிந்தவர் 
  • ஆன்மாவின் குரல் நம்மை உள்ளிருந்தே வழி நடத்தும்
  • உதவி செய்ய இதயம் உள்ளவனுக்கே விமர்சனம் செய்யும் உரிமையுண்டு
  • உன்னால் முடிந்ததை நீ முயலாது விட்டால் நீ சந்தோசமாக இருக்க முடியாது
  • கையில் சுத்தி உள்ளவன் பார்ப்பதை எல்லாம் ஆணி என நினைக்கிறான்
  • தடைகளை கண்டுதயங்காது நடந்தால் அவை தானே தகார்ந்துவிடும்
  • தனது சுய சொருபத்தை சாதிபபதே சுய சாதனையாகும்
  • நிகழ்காலத்தில் வாழத்தெரிந்தவரே மனஅமைதியுடன் இருக்க  முடியும்
  • புதுமையை அச்சமில்லாது சந்திக்கும்  துணிவுள்ளவரே சாதிப்பார்
  • மனிதர் யாரும் தன்னை குறைந்த விலைக்கே விற்கிறார்
  • வளைந்து கொடுக்கும் படைபாற்றல் உள்ளவரே வாழ முடியும்


அலக்ஸாண்டர் போப்
  • அரைகுறை அறிவும் படிப்பும் ஆபத்து
  • அளவுக்கு அதீதமான ஓய்வு வலிகளுக்கு விதையாகிறது
  • அறிஞர் தொடவும் அஞ்சுவதில் மூடர் மூழ்கி நீச்சலடிப்பார்
  • அறைகுறை அறிவு அறியாமையைவிட ஆபத்தானது
  • இளமையில் அழகு அதிகம் அறிவோ அபூர்வம்
  • இளமையின் அழகிலும் துடிப்பிலும் அறிவு என்பது அபூர்வமே
  • உத்தமானான மனிதர் என்பவர் கடவுளின் உன்னதமான புனித படைப்பு
  • எதிரியின் தடுமாற்றத்துக்காக வஞ்சநரி தந்திரமாக காத்திருக்கிறது
  • ஒருவர் இல்லாத போது அவர் மீது அவதூறு பேசாதீர்கள்
  • ஒழுங்கும் ஒழுக்கமுமே சுவர்க்கத்தின் முதல் சட்டம்
  • குறுகிய ஆன்மாக்கள் என்பது கழுத்து குறுகிய பாத்திரம் 
  • உள்ளேயும் விடாது வெளியேயும் விடாது
  • கோபமென்பது மற்றவர் குற்றத்துக்கு நம்மை பழி வாங்கும் செயல்
  • தகுதியில்லாதவரை புகழ்வது மாறுவேடமிட்ட ஊழலே
  • தவறுவது மனித இயல்பு அதை மன்னிப்பதே தெய்வ இயல்பு
  • தவறுவது மனித இயல்பு மன்னிப்பதே தெய்வீககுணம்
  • திறமையை முட்டாள்கள் புகழ்வார் அறிஞர்களோ ஆமோதிப்பார்
  • நமது பங்கை சரியாகச் செய்தாலே நிச்சயம் மரியாதை கிடைக்கும்
  • நல்ல ரசணையே ந்ல்ல அறிவாளரை உருவாக்குகிறது
  • நல்ல ரசனையுள்ள மனிதரே நல்ல படைப்பாளியாகிறார்
  • நல்லது சொன்ன நன்பரில்லை
  • நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் நம் தரம் குறைகிறது
  • நேர்மையான மனிதரின் படைப்பிலே இறைவன் பெருமையடைகிறான்
  • புனிதர்கள் புகத்  தயங்கும் செயல்களிலே மூடர்கள் ஒடி விளையாடுவார்
  • புனிதர்கள் புகத்  தயங்கும் செயல்களிலே மூடர்கள் ஒடி விளையாடுவார்
  • பெருமையுடைய பெண்கள் கூட காதலால் ஏமாற்றப்படுகிறார்கள்
  • பொறுமையும் நம்பிக்கையும் முதல் ஞானமாகும்
  • மனித இருதயங்களில் நம்பிக்கையெனும் ஊற்று வற்றாது சுரக்கிறது
  • மனிதருடைய அகந்தை தேவதைகளாக தேவளாகவே ஆக விரும்புகிறது
  • முகத்தின் இனிமை மொழியில் மென்மையுடையவர் வாழ்வில் மேன்மையடைவார்
  • மூடர்கள் பாராட்டுவார் அறிஞரோ அரவனைத்து ஆதரவு தருவார்
  • மென்மையாக பேசுவது மன நலத்துக்கு நல்ல மருந்து 
  • வாய்மை என்பது மகிழ்ச்சிக்கு குறைவு என்பது உண்மையான நிதர்சனம்


அரிஸ்டாட்டில்….
  • அச்சப்படும் மனிதன் மீது யாராலும் அன்பு செலுத்த முடியாது
  • அடிக்கடி கோபப்படுபவன் விரைவில் வயோதிகனாகி விடுவான்
  • அண்டம் முழுதுக்கும் அடிப்படையான பொது இயக்கசக்தியே கடவுள்
  • அரிய மனித வாழ்வின் முதலும் முடிவுமாக இருப்பது இன்ப ஙகர்வு
  • அழகு ஆண்டவன் கொடுத்த பரிசு அதற்கு கர்வ பட கூடாது
  • அறிவும் ஞானமும் சமதானமும் கலந்த தீர்ப்பே சரியான நீதியாகும் 
  • அன்பு மதிப்பு மரியாதைக்கு காரணமான 
  • குடும்பம் இல்லாத சமுதாயம் பாலைவனம்
  • ஆண்களின் துணிவு ஆள்வதில் பெண்களின் துணிவு பணிவு 
  • ஆன்மா உயிரின் சக்தி அது அணுவால் ஆனதல்ல அழிவதல்ல
  • இயற்கையின் நியதிக்கு மாறுபட்டவையாவும் அநீதியே
  • இலட்சிய மனிதன் என்பவன் எதையும் கலங்காது ஏற்பான்
  • இளமை என்பது மது போல போதையானது அதனால் மயக்கத்திலே வாழ்கிறார்
  • இளமை கொண்டாட்டம் மதியம்  போராட்டம் முதுமை  திண்டாட்டம்
  • உண்மையில் இருந்து ஒரு நூல் விலகினால் அக‌ல பாதாளம் தான்
  • எதுவும் எவருக்கும் சொந்தமில்லை என்பது நாணயத்தின் மறுபக்க்ம் 
  • எல்லா திறமைகளும் நல்ல பழக்கங்களின் பயிற்சியினாலேயே வளர்கின்றது 
  • எல்லா மனிதருக்கும் அறிய வேண்டுமென்ற ஆர்வம் உடன் பிறந்தது
  • எனது ஆசிரியர் மரியாதைக்குரியவர் ஆனால் உண்மை அவரைவிட மரியாதைக்குரியது
  • ஒவ்வொரு பொருளுக்கும் வடிவம் செயல் நோக்கம் உண்டு
  • கல்வியின் வேர்கள் கசக்கும் ஆனால் அதன் கனிகள் இனிக்கும்
  • கற்றவர்களால் மட்டுமே தனக்கு பிடிக்காத சிந்தனையை 
  • காது கொடுத்து கேட்க முடியும்
  • கெளரவத்தை பெறுவதை விட அதற்கு தகுதியானவ்ராக நடப்பதே சிறப்பு
  • கெளரவம் என்பது பதவிகளை அடைவதை விட 
  • அதற்கு தகுதியானவராக இருப்பது தான்
  • சட்டங்களின் மூலம் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்த முடியாது  
  • சட்டம் என்பது அறிவுக்கு உடன்பட வேண்டும் உணர்ச்சிக்கு அடிமையாக கூடாது
  • சமுதாய தீங்குகளுக்கு சொத்துரிமையை விட பொறாமை உணர்வே காரணம்
  • சிறந்த ஆன்மா என்பது சிறிதள‌வாவது பேதலித்த நிலையுள்ளது
  • சிறந்த நற்பண்புகள் யாவும் நிறைந்த ஞானம் முதிர்ந்த அறிவின் விளைவே
  • தனிமனிதனின் சிறப்பியல்பு இல்லாத பொது உடைமை குன்றி அழியும்
  • தீமை என்பது இருக்கும் போது தெரியாது மரமான பின் அழியாது
  • தீமைகளை எதிர்ப்பார்த்தால் அச்சமே கிளைவிடும்
  • தீமையை எதிர்பார்க்கும் வலியே அச்சம் என்பது
  • துரதிட்டத்திலும் வறுமையிலும் உண்மை நன்பர்களே கடவுள்
  • நமது மகிழ்ச்சி என்பது நமது மனிதில்தான் இருக்கிறது
  • நற்செயலால் அடையும் இன்பத்தையே நாம் நாட வேண்டும்
  • நியாயம் என்ற நிலத்தில் நேர்மை என்ற பூ மலரும்
  • நீதி என்ற நூல்தான் மனித முத்துகளை சமூக மாலையாக்குகிறது
  • பேரரசுகளின் விதி இளைஞர்களின் கல்வியை பொறுத்ததே
  • மனிதர்கள் அடைய விரும்பும் யாவும் மகிழ்வு பெறுவதற்கான கருவிகளே 
  • மனிதன் என்பவன் சமுதாயத்தால்தான் முழுமையடைகிறான்
  • மனிதன் ஒரு புனிதமான மிருகம் சட்டம் ஒழுங்குதவறினால் மோசமானமிருகம்
  • முகத்துக்கு நேராக புகழ்பவர் பயன் கருதியே செய்கிறார்கள்
  • முக்ய பதவியில் உள்ளவர் ஆயுள் முழுதும் அதில் நீடிப்பது நல்லதல்ல
  • முழுமையாக மனிதன் வாழ்வில் விபத்துக்களை நளினமாக கண்ணியத்துடன் ஏற்பான்
  • முழுமையான மனிதன் முக்ய பதவி உள்ளவர் 
  • ஆயுள் முழுதும் அதில் நீடிப்பது நல்லதல்ல
  • வறுமை பெற்றெடுத்த குழந்தைகளே குற்றமும் புரட்சியும்
  • வறுமையே வன்முறைக்கும் புரட்ச்சிகளுக்கும்  தாய்
  • வாய்மை என்பது என்னவென்றால் நீதியை நியாய‌த்தை நிலைநாட்டுவதுதான் 
  • வாழ்வின் துன்பங்களை சமாளிக்க நண்பரை விட நல்ல துணை இல்லை


அயன்ரான்ட்
  • இளமையில்வெற்றி பெற சுறுசுறுப்பும் 
  • முதுமையில் வெற்றி பெற பொறுமையும் தேவை
  • உடல் இல்லாமல் உயிரில்லை செல்வமில்லாமல் மனிதமில்லை
  • உனது அனுமதியின்றி உனக்கு தீமை நடந்து விட முடியாது
  • எதற்கும் இருபக்கம் ஒன்று சரிமற்றது தவறு நடுவே இருப்பது சர்வநாசம்
  • எதுவும் உன் அனுமதியின்றி உன் உள்ளே புக முடியாது
  • ஒழுக்கத்தின் தேவை மகிழ்வதற்காக அது துயரடைவதற்காக அல்ல
  • ஒழுக்கம் இல்லாத வெற்றிடத்தால் தான் எல்லா சாத்தான்களும் பரவுகிறது
  • ஒழுக்கமும் பணமும் முரண்பாடும்போது பணமே எப்போதும் வெல்கிறது
  • கலாசார பாரம்பரியம்  பண்பாடு மனசாட்சிக்குள் விதைத்த விதைகளே பாவமன்
  • கலைகள் ,ஞானம்,விஞ்ஞானம் ,மதம் யாவும் ஒரு மரத்தின் கிளைகளே
  • சந்தர்ப்பம் எனும் படிகளில் ஏறினால் வெற்றி ஏணியில் உயர முடியும்
  • சாதனைகளுக்காகத்தான் வெற்றி அது ம்ற்றவரை தோற்கடிக்க அல்ல
  • சிந்திக்கும் மனிதர்களை அடக்கியாள முடியாது
  • செல்வமென்பது வாகனம் அதை நீதான் சரியாக ஒட்ட வேண்டும்
  • துப்பாக்கி முனையால் ஒழுக்கத்தை வளர்க்கமுடியாது
  • நமது சாதனைகளின் மேடையிலேதான் மகிழ்ச்சி உருவாகிறது
  • நன்மையில்லாத வெற்றிடத்தில் தீமையெனும் நஞ்சு பரவும்
  • படைப்பாளியின் நோக்கம் சாதனைக்கான முனைப்பு வெற்றிக்கான வெறியல்ல
  • பணம் தான் தீமையின் வேர் என்றால்,பணத்தின் வேர் எது?பணம் தீமையானது என்று சொல்லும் மனிதரை விட்டு விலகி விடு
  • மக்களின் வாய்மையை பரிசோதிக்கும் உரைகல் அச்சடித்தநோட்டு
  • மகிழ்ச்சிதான் வாழ்வின் இலட்சியம் அதை அடை துயர்படகூடாது 
  • முரண்பாடுகள் இயற்க்கையானது அல்ல அது நமது செயல்களால்
  • முனைப்பு என்பது  அந்த செயலுக்கான உத்வேகத்தை தடுகிறது

நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது எப்படி?

மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வெற்றிகரமான முடிவுகளை எதிர்பார்க்கும் ஒரு சிறந்த அணுகுமுறையே நேர்மறை எண்ணங்கள் (positive thinking) எனப்படுகிறது. எல்லோரும் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறோமா என்றால் பலரிடம் பதிலிருக்காது. வாழ்க்கையில் பல பேர் பத்து சதவிகிதமாவது எதிர்மறை எண்ணங்களை (negative thinking) கொண்டிருப்பர். எதிர்மறை எண்ணங்களை தொடர்ந்து வளர்த்துக் கொள்பவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் திணறுவர். ஆனால் நேர்மறை எண்ணங்கள் நம்பிக்கையை ஆதாரமாக பயன்படுத்தி மன அழுத்தத்தை போக்க பேருதவி புரிகிறது. நேர்மறை எண்ணங்களால் பல நல்ல விஷயங்கள் ஒருவரது வாழ்வில் நடைபெறுகின்றன. 

நேர்மறை எண்ணங்களால் ஆயுள் காலம் அதிகரிக்கிறது. மன அழுத்தம் குறைகிறது. துன்பங்களை தாங்கும் உந்துசக்தி கிடைக்கிறது. நல்வாழ்வு அமைகிறது. இதயநோயினால் ஏற்படும் இறப்பு ஆபத்து குறைகிறது. கஷ்டமான காலங்களில் கஷ்டங்களை தாங்கி, மன அழுத்தத்தை சமாளிக்கும் திறனை அளிக்கிறது. இப்படி நேர்மறை எண்ணங்களை பற்றி பல சிறந்த விஷயங்களை கூறிக்கொண்டே போகலாம். இனி எவ்வாறெல்லாம் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு வாழ்வில் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

1. நகைச்சுவை உணர்வை வெளிக்கொண்டு வரவும்: தினசரி நிகழ்வுகளில் ஒரு நகைச்சுவையான விஷயத்தை நாட வேண்டும். வாழ்க்கையில் சிரிக்க முடிந்த அளவில் சிரித்தால், குறைந்த மன அழுத்தத்தை உணர்வோம். 

2. நேர்மறை எண்ணங்களை கொண்ட மனிதர்களை அமைத்துக் கொள்ள வேண்டும்: வாழ்க்கையில் வரும் மனிதர்கள் நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஆதரவாக நல்ல பல அறிவுரைகளை தந்து, உங்களது கருத்துக்களை காது கொடுத்து பொறுமையுடன் கேட்பவராக இருப்பவர்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும். இதனால் அவர்கள் மூலம் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள முடியும். ஆனால் எதிர்மறை எண்ணங்களை உடையவர்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டால், அவர்கள் மூலம் மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பை பெறுவீர்கள். இதனால் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிடும். 

3. சுய சிந்தனை மூலம் நேர்மறை எண்ணங்களை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்: நேர்மறை எண்ணங்களை சிந்திக்க சில வழிகளை பின்பற்றலாம். உதாரணத்திற்கு ‘இதற்கு முன் நான் இந்த செயலை செய்ததே இல்லை' என்று ஒரு விஷயத்தை யோசிப்பதை விட, ‘புதிதாக ஒரு விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது' என்று நேர்மறையாக சிந்திக்க வேண்டும். அதேபோல் ‘இந்த செயலை செய்ய மிகவும் கடினமாக இருக்கிறது' என்று எண்ணாமல், நேர்மறையாக ‘நான் வேறொரு கோணத்தில் இதை அணுகி சமாளிப்பேன்' என்று சிந்திக்க வேண்டும். இப்படி எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும். 

4. மற்றவர்களுக்கு உதவலாம்: மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல், அதிலிருந்து விடுபட மற்றொரு நபருக்கு ஏதாவது நன்மை செய்ய முயற்சி செய்யலாம். இவ்வாறு செய்யும் போது உங்களது தவறான எண்ணங்களிலிருந்து கவனத்தை வேறு நல்ல விஷயத்தில் திசை திருப்ப முடியும். மற்றவருக்கு செய்யும் நன்மைகளால் மனத்திருப்தியும் ஏற்படும். இதனால் நல்ல எண்ணங்கள் மனதில் உருவாக ஒரு வாய்ப்பு கிடைக்கும். 

5.நேர்மறையான மேற்கோள்களை படிக்கவும்: நேர்மறையான மேற்கோள்களை உங்களது கணிணியில், பிரிட்ஜ் கதவுகளில் மற்றும் முகம் பார்க்கும் கண்ணாடியில் காகிதத்தில் எழுதி ஒட்டி வைக்கலாம். இதனால் ஒவ்வொரு முறையும் இவற்றை பார்க்கும் போது அவற்றை படித்து நல்ல எண்ணங்களை மனதில் விதைக்கலாம். 

6. தியானம் செய்யவும்: மனதை அமைதிப்படுத்தி நல்ல எண்ணங்களை உருவாக்குவதில் தியான முறையை பின்பற்றலாம். அதற்கு அமைதியாக கண்களை மூடிக் கொண்டு ஒரு மணி நேரம் எந்த கவலை தரும் விஷங்களை பற்றி சிந்திக்காமல் ஒரே விஷயத்தை நேர்மறையாக சிந்திக்க வேண்டும். ஆரம்பத்தில் இது கடினமாக இருக்கும். ஆனால் தொடர்ந்து செய்து வர நேர்மறையான எண்ணங்களால் மனம் சூழப்பட்டு எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையில் வாழலாம்.

இலக்குகளை அடைய

இலக்குகளை  அடைய 10 வழிகள்

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இலக்கு என்பது அவசியம். இலக்கு இல்லாத மனிதன் மாலுமி இல்லாத படகு போல தத்தளிப்பான். மனிதன் நிர்ணயிக்கும் இலக்குதான் பிற்காலத்தில் அவன் வாழ்க்கையை மாற்றியமைக்கப்போகும் திருப்பு முனை. அதேபோல் இலக்கைத் தேர்வு செய்வதிலும், தேர்வு செய்த இலக்கை அடைவதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், வாழ்க்கையில் தோற்றவர்களின் பட்டியலில் உங்களின் பெயரும் இடம்பெற்றுவிடும்.

அதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்கு மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் உங்கள் சக்திக்குத் தகுந்ததாகவும், உங்கள் பொருளாதார வசதிக்கு ஏற்றதாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்வது சிறப்பு. இப்படி இலக்குகளை வகுத்துக்கொண்டு அதை சிறிது சிறிதாக அடைய முயற்சி செய்யலாம்.

இங்கே இலக்குகளை வகுத்து அவற்றை அடைவதற்காகப் பயணம் மேற்கொள்ள 10 வழிகளைக் கூறுகிறேன் நிச்சயம் உங்களுக்கு அவை வழிகாட்டும் என்ற நம்பிக்கையில்.

வழி 1: இலக்கு நிர்ணயித்தல்

உங்கள் இலக்குகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில் தெளிவாக எழுதுங்கள். இலக்குகளை எழுதிப்பார்த்து, அவற்றை அடிக்கடி படித்து மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். அப்படி மனதில் பதிய வைத்தவர்களில் 80 சதவிகிதம் பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனவே உங்களது இலக்குகளையும் எழுதுங்கள். அப்படி நீங்கள் நிர்ணயிக்கும் இலக்கு அளவிடக் கூடியதாகவும், அடையக் கூடியதாகவும், குறிப்பாக குறிப்பிட்ட காலத்திற்குள் முடியக் கூடியதாகவும் இருக்கக் கூடிய “ஸ்மார்ட்”டான இலக்காக நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.

வழி 2: திட்டமிடல்

திட்டமிடத் தவறுவது, தோல்விக்குத் திட்டமிடுவதற்கு ஒப்பாகும். எனவே திட்டமிடல் அவசியம். அப்படி நீங்கள் இலக்குகளை அடைய வகுக்கும் திட்டங்கள் சிறியதாக இருக்கும்படியும், எளிதில் செயல்படுத்தக் கூடிய வகையிலும் வகுத்துக் கொள்ள வேண்டும். மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்குமாறு திட்டங்களை அமைத்துக் கொள்வதுடன், வகுத்த திட்டத்தை, எழுதி வைத்த இலக்கை மாதம் ஒருமுறை மனதிற்குள் அசைபோட்டுக் கொண்டே இருங்கள்.

வழி 2: காரணங்களை எழுதுங்கள்

உங்களுடைய இலக்குகளுக்கான காரணங்களை எழுதுங்கள். அந்த இலக்குகளை அடைவதற்கு உங்களை உந்தும் காரணிகளையும் எழுதி வையுங்கள். அவை உங்கள் மனதிற்கு ஊக்கக் கிளர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் அளிப்பவையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். நீங்கள் ஆழ்ந்து, நுட்பமாக சிந்திக்கும்போது அந்த இலக்குகள் மிகுந்த முக்கியத்துவம் மிகுந்தவையாக இருக்க வேண்டும். இப்படி எல்லா விதத்திலும் உங்களுடைய இலக்குகளைப் பூர்த்தி செய்பவையாகக் காரணங்கள் இருந்தால் மேற்கொண்டு சிறிதும் தாமதம் இன்றி வெற்றியை நோக்கி உங்கள் பயணத்தைத் தொடருங்கள்.

வழி 4: நேர்மறை எண்ணங்கள்

நேர்மறையான எண்ணங்களை உள்ளத்தில் உருவாக்கும் பொருட்டு பல புதிய நேர்மறை வாக்கியங்களை உங்களுக்கென்று உருவாக்கி எழுதி வையுங்கள். ‘என்னால் முடியும்’ (I Can) , ‘என்னால் முடியாவிட்டால் வேறு யாரால் முடியும்’ (If not me then Who?), ‘ஒரு வாரத்திற்குள் முடித்துவிடுவேன்’ போன்ற நேர்மறையான எண்ணங்களை உள்ளத்தில் உருவாக்கிக் கொண்டு தன்னம்பிக்கையைக் கொடுக்கக் கூடிய பல புதிய நேர்மறையான வாக்கியங்களை உங்களுக்காகவே உருவாக்கிக் கொள்ளுங்கள். அப்படி உருவாக்கும் வாக்கியங்கள் உங்களது தன்னம்பிக்கையைத் தூண்டச் செய்யுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

வழி 5: உருவகம் செய்யுங்கள்

எப்போதும் உங்கள் மனதில் தோன்றும் இலக்குகளை உருவகம் செய்யப் பழகிக்கொள்ளுங்கள். தெளிவாகவும், எளிமையாகவும் கூறினால் கனவு காணுங்கள். நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அது குறித்து அடிக்கடி மனதில் கற்பனை செய்யுங்கள். முடிவு செய்திருந்த உங்களது இலக்கை அடையும்வரை அந்த நினைப்பு மூச்சில் நிறைந்து, உயிரில் கலந்திருக்கும் படி உருவகம் செய்து கொள்ளுங்கள்.

வழி 6: செயல்படுதல் / அமல்படுத்துதல்

இதுவரை சொல்லப்பட்ட நடைமுறைகளை அன்றாட வாழ்க்கையில் அமல்படுத்த காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடனே உங்களுடைய இலக்குகளை மனதில் அசைபோடுங்கள். உற்சாகம் தரக்கூடிய வார்த்தைகளையும், தன்னம்பிக்கை தரக்கூடிய வார்த்தைகளையும் சத்தமாக உரக்க உச்சரித்து இலக்குகளை உருவகம் செய்து பாருங்கள்.

இதை மட்டும் செய்துவிட்டு முடிந்துவிட்டதாக நினைக்கக்கூடாது. நாள்தோறும், ஏதேனும் ஒரு திட்டம் அல்லது நடவடிக்கையைத் தெளிவாக வகுத்துச் செயல்படுத்துங்கள். மறக்காமல் அவற்றைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இவற்றையெல்லாம் செய்து முடித்தபிறகு செயலில் இறங்குங்கள். இத்தகைய இலக்கை நோக்கிய பயணத்தில் எத்தகைய சூழ்நிலை வந்தாலும், அன்றைய இலக்கை அடைவதற்கான நடவடிக்கையில் இருந்து சிறிதும் பின்வாங்காதீர்கள்.

வழி 7: எதிர்மறை எண்ணங்களை நீக்குதல்

உங்கள் உள்ளத்தில் இருந்து எதிர்மறையான எண்ணங்களை முதலில் துடைத்தெறியுங்கள். மனதில் ஏதாவது ஒரு ஓரத்தில் ஒளிந்திருக்கும் அவைகள் தான் உங்கள் இலக்குகளை அடையும் நோக்கத்தைச் சீர்குலைக்கும் தடைக்கற்கள்.

நல்ல சிந்தனைகள் உருவாவதற்கும், நம்பிக்கையூட்டும் வாக்கியங்கள் மனதில் நிறைவதற்கும் எதிர்மறை சிந்தனைகளே தடைகளாக இருப்பதால் அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு, இலக்கை அடைவதற்குத் துணை செய்யும் நேர்மறை வாக்கியங்களை எப்போதும் மனதில் அசைபோடுங்கள்.

வழி 8: சவால்களைச் சமாளி

உங்களுடைய இலக்குகளை அடையும் முயற்சியில் நாள்தோறும் நீங்கள் பல்வேறு சவால்களைச் சந்திக்க நேரும். அப்போது அவற்றை நீங்கள் குறித்து வையுங்கள். அவற்றை நீங்கள் சமாளிக்க மேற்கொண்ட முயற்சிகளை, நடவடிக்கைகளைப் பதிவு செய்யுங்கள். அப்போது நீங்கள் எதிர்கொண்ட தடைகளை வரிசைப்படுத்துவதுடன் அவற்றைத் தகர்க்க மேற்கொண்ட முயற்சிகளையும், பெற்ற வெற்றிகளையும் குறித்து வையுங்கள். ஏனென்றால் வரிசைப்படுத்தும் போது தான், நீங்கள் சந்தித்த தடைகள் எத்தனை? அவற்றை சமாளித்துப் பெற்ற வெற்றிகள் எத்தனை என்பது தெரியும். அப்படி செய்தால் தான் சவால்களைத் தகர்க்க நீங்கள் மேற்கொண்ட வழிகள், கிடைத்த வெற்றிகள் என்பதையெல்லாம் உணர்ந்து அடுத்த கட்டத்திற்கு நீங்கள் செல்ல உதவியாக இருக்கும்.

வழி 9: நண்பர்களைத் தேர்வு செய்

ஒவ்வொருவரும் தங்களுடைய இலக்கை அடைவதற்கு நல்ல நண்பர்கள் அவசியம் தேவைப்படுவார்கள். நண்பர்கள் தான் இலக்கை நோக்கிச் செல்வதற்கு உறுதுணையாக இருப்பார்கள். எனவே உங்களுக்கு யார் உந்துதலாக இருக்கிறார்களோ அத்தகைய நண்பர்கள் வட்டாரத்தில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். உங்களால் முடியுமானால், இலக்குகளை அடைவதற்கு மிகச் சரியான வழிகாட்டியான அவர்களைத் தேடிச்சென்று நட்பு பாராட்டுங்கள். உங்களுடைய இலக்குகளை அடைவதற்கு ஊக்கமளிக்கும், உந்துதல் அளிக்கும் காரணியாக இருக்கும் உங்களின் ஆசிரியர், சகோதர சகோதரி, அண்டை வீட்டார் யாராகவும் இருக்கலாம். அவர்களை உங்கள் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு நட்பு பாராட்டுங்கள்.

வழி 10: பாராட்டிக் கொள்ளுங்கள்

இலக்கு நோக்கிய பயணத்தில் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளில் சிறிய வெற்றி கிடைக்கிறதா? அதற்கு உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். பெரிய வெற்றியை நோக்கிய உங்கள் பயணத்தில் இத்தகைய சின்னச்சின்ன வெற்றிகள் தான் உங்களுக்கு உந்து சக்தியாக இருக்கும். எனவே சிறுசிறு இலக்குகளை நிர்ணயித்து அதை எளிதாக அடைய முயற்சி செய்யுங்கள். சிறிய வெற்றி கிடைத்தாலும் உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். அந்த மகிழ்ச்சி உங்களை உற்சாகப்படுத்துவதுடன் இலக்குகளை நோக்கி ஓடும் ஓட்டத்தை வேகப்படுத்தும்.

மேற்கூறிய 10 வழிகளில் நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் தேர்வு செய்யும் இலக்கு உங்களுக்கு அச்சத்தை, நடுக்கத்தை ஏற்படுத்தி உங்களை சோர்வடையச் செய்து மூலையில் முடங்கச் செய்துவிடக் கூடியதாக இருக்கக்கூடாது என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள். நீங்கள் வகுத்த இலக்கு உங்கள் மனதில் அச்சத்தை உருவாக்கினால் அவற்றைச் சிறிதும் தயங்காமல் தூக்கியெறியுங்கள். அடுத்த இலக்கைத் தேர்வு செய்து பயணத்தைத் தொடருங்கள். ஏனென்றால் சாதனை உலையில் எரிபொருள்களே இலக்குகள் தான்.

வெற்றியடைய முத்தான 10 சுலபமான வழிகள்!

நம்ம நேரத்தை நன்றாக திட்டமிட்டு செலவு செய்ய, அப்படிச்செய்தபின் அதற்க்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கும் 10 முத்தான, அதேசமயம் மிகவும் சுலபமான (?) வழிகளை பின்வரும் பட்டியலில் பார்ப்போம்…..
  1. ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதை நிறுத்துங்கள் (Stop multitasking): சமீபகாலங்கள்ல, பொதுவாக பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது. அடிப்படையில், அறிவியல்ரீதியாக பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு தாவுவது/மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது என்பது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது!
  2. முக்கியத்துவம் வாய்ந்த செயல்களை தேர்வு செய்து கொள்ளுங்கள் (Set your priorities): ஒவ்வொரு நாளுக்குமான தலையாய செயல்களை மனதில் பதிவு செய்துகொள்ளுங்கள். உங்கள் தேர்வுகளின் முக்கியத்துவங்கள் மாற்றியமைப்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, தீப்பற்றிக்கொண்ட ஒரு கட்டிடத்தை விட்டு வெளியேறுவதைவிட பணியிடத்தில் ஒரு விண்ணப்பத்தை எழுதி முடிக்கவேண்டுமென்பது முக்கியமானதல்ல!
  3. உடற்பயிற்ச்சி செய்யுங்கள் (Exercise): உங்கள் உழைப்புத்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த மனநலம் என்பது மிக அவசியம்! அதனால், புதிய யுக்திகளை கண்டறியவும் மன நலனை மேம்படுத்தவும், பணிக்கிடையில் நல்ல காற்றை சுவாசித்து காலாற நடந்துவிட்டு வாருங்கள்!
  4. ‘முடியாது’ என்பதை கனிவாக சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் (Learn to say ‘no’ with kindness): நம் பணிகளுக்கிடையில் நண்பர்களுக்கு சிறிய உதவிகள் செய்வதென்பது அவசியம்தான் என்றாலும், அச்சிறு உதவிகள் சில சமயங்களில் மிகுந்த நேரம் பிடிப்பவையாக, அயற்ச்சியைத் தருபவையாக, முக்கியத்துவம் குறைந்தவையாக இருக்கும் பட்சத்தில், கனிவாக “என்னால் இவ்வுதவி செய்ய இயலவில்லை” எனச் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்!  இது உங்கள் நேரத்தை சேமிக்கவும், மன உளைச்சலைத் தவிர்க்கவும் உதவும்!
  5. காலையில் ஒரு 15 நிமிடம் முன்பாக எழ முயற்ச்சியுங்கள் (Get up fifteen minutes early): ஒவ்வொரு நாளும் காலையில் சீக்கிரம் எழுந்து, பணிகளைத் தொடங்கும்முன் தியானம் செய்யவோ, உங்களின் டைரிக் குறிப்பு எழுதவோ பழகிக்கொள்ளுங்கள். உடல் நலனைப்போலவே மனநலனும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதது!  உடற்பயிற்ச்சியிலும், மனநலன் காக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள்!
  6. போதுமான அளவு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் (Get enough rest):ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லுமுன், அதிகப்படியாக நீங்கள் செலவு செய்யும் ஒரு மணி நேரம், உங்களின் அடுத்த நாளின் ஒரு மணி நேர வேலையை  குறைப்பதில்லை. ஓய்வின்றி வேலைசெய்பவர்கள் குழப்பத்துக்குள்ளாவார்கள் என்கிறது உளவியல்!
  7. எதிர்பார்ப்புகளை மேலான்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள் (Manage expectations): உங்கள் அறையக் குப்பையாக்கிவிட்டு, விழுந்து விழுந்து சுத்தம் செய்வதற்க்கு பதிலாக, குப்பைகள் சேர்வதை முன்பே தவிர்த்துவிட்டால், குப்பையை சுத்தம்செய்வதில் வீணாகும் உங்களின் பொன்னான நேரம் சேமிக்கப்படும்!
  8. மின்னஞ்சல் வாசிக்கும் நேரத்தை திட்டமிட்டு வைத்துக்கொள்ளுங்கள் (Check email at set times): ஒவ்வொரு மின்னஞ்சலும் குட்டி போடும் தெரியுமா உங்களுக்கு?! அதாங்க, நீங்க அனுப்புற ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் ஒரு பதில் மின்னஞ்சல் வருமே அதைச்சொன்னேன். அதாவது, மின்னஞ்சல்களை தினசரி சரியாக கவனித்துக்கொண்டால் நேர விரயம் ஏற்படாது. அதேமாதிரி, வேறு வேலை செய்யும்போது மின்னஞ்சல்களை பார்க்காதீங்க, கவனச்சிதறல் ஏற்படுவதை தவிர்க்க!
  9. தேவையில்லாதபோது இணையம்/செல்பேசியை அணைத்துவிடுங்கள் (Unplug): அசினும், நயன்தாராவும் அடுத்த எந்த படத்துல நடிக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கலைன்னா, ஒன்னும் குடி முழுகிப்பொயிடாது. அதனால, இணையத்தை உலாவுவதிலும், செல்பேசியில் குறுச்செய்தி அனுப்பவதிலுமே காலத்தைக் கழிக்காமல், இரண்டையும் சிறிது நேரம் அணைத்துவிட்டு, உடற்பயிற்ச்சியோ தியானமோ செய்து ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!
  10. செயல்பட அதிக நேரம் இருப்பதாய் எண்ணிக்கொள்ளுங்கள் (Embrace time-abundant thinking): ஒவ்வொரு செயலைச் செய்யவும் போதுமான நேரம் இருக்கும்பட்சத்தில், அதை உணர்ந்து மன உளைச்சலைத் தவிர்க்கவேண்டும். குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். மாறாக, மனதுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபட்டு மனதையும் லேசாக்கி, நேரத்தையும் சரியாக செலவு செய்யவேண்டும்.
நாம் எப்போதும் இறந்தகாலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்வதைத் தவிர்த்து நிகழ்காலத்தில் வாழப் பழகிக்கொண்டோமானால் மனஅழுத்தம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்துபோகும். நேற்றும் நாளையும் மாயைகள். அவை இனி இல்லை, இந்தக் கணம்தான் உண்மை என்று எண்ணி வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்ளுங்கள். வெற்றி நமக்கே…..!! மீண்டும் சந்திப்போம்.

அறிவாற்றல் இயற்கையாகவே அமைவதா அல்லது வளர்த்தெடுக்கக் கூடியதா?

நெடுங்காலமாக மனித இனத்தில் இருந்து கொண்டிருக்கும் கேள்விகளுள் ஒன்று: அறிவாற்றல் இயற்கையாகவே அமைவதா அல்லது வளர்த்தெடுக்கக் கூடியதா? (Nature Vs Nurture). இந்தக் கேள்வியின் இன்னொரு பரிமாணம் தான், ”அறிவாற்றல் மரபுப் பண்பா, இல்லை, சமூகச் சூழ்நிலையால் அமைவதா?”
உலகின் எல்லாப் பகுதிகளிலும் அறிவாற்றல் உட்பட பல்வேறு பண்புகளும் ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ அல்லது இனக்குழுவுக்கோ மரபார்ந்தவை, தலைமுறைகளாக வருபவை என்ற கருத்து பொதுவாக இருந்தது, பின்னர் சமூக-பண்பாட்டு வளர்ச்சியின் நிலையில் அறிவாற்றல் என்பது ஒரு மரபுப் பண்போ, பாரம்பரியமானதோ அல்ல, அது ஒரு பொதுப் பண்பு; சூழ்நிலையும், வாழ்நிலையுமே அதனைத் தீர்மானிக்கிறது, தகுந்த சூழ்நிலை அமைந்தால் எல்லோராலும் அறிவாற்றலைப் வளர்த்துக் கொள்ள முடியும் என்று வாதிடப்பட்டது.
மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, ஒரு உயிரியின் உடற்கூற்றியல் (Anatomy) மற்றும் உயிர்செயற்பாட்டியல் (Physiology) ரீதியான எல்லாப் பண்புகளையும் மரபணுக்களே தீர்மானிக்கின்றன, மற்றும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துகின்றன என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. அதுவரை வெளிப்படுத்தப்பட்ட உயிரியல் பண்புகளையே (Phenotype) ஆராய்ந்து கொண்டிருந்த உயிர் அறிவியல், அப்பண்புகளைக் குறிக்கும் மூலமாகிய மரபணுத் தொகையின் (Genotype) கட்டமைப்பை ஆராயும் மூலக்கூறு உயிரியல் தொழில்நுட்பங்களின் வழியாக புதுப்பாய்ச்சல் பெற்றது. மரபுப் பண்புகளையும், அதன் மூலமாகிய மரபணுக்களின் பங்களிப்பையும் பற்றிய ஆய்வு எல்லாத் துறைகளிலும் (பரிணாமவியல், மரபியல், உயிர்வேதியல், நரம்பியல், உளவியல், நோய்க்கூறியல், நடத்தை மரபியல் மற்றும் பல…) வேகம் பெற்றது.
அறிவாற்றலை மரபியல், நரம்பியல் மற்றும் நடத்தை மரபியல் (Behavioural genetics) ஆகிய துறைகளின் வாயிலாக உயிரியல் ரீதியாக அணுகலாம். அதிவேகமாக வளர்ந்து வரும் இந்தத் துறைகள் அறிவாற்றலைப் பற்றி என்ன சொல்கின்றன?
அறிவாற்றல்
அறிவாற்றல் மரபுப் பண்பா என்ற கேள்விக்கு முன், அறிவாற்றல் என்று குறிப்பிடப்படுவது எது? என்று தெரிந்து கொள்ளுதல் முக்கியம். அறிவாற்றல் (Intelligence) என்பது அறிதல் திறன் (Cognition), சிந்தித்தல், சமயோசிதம், கற்றல், வெளிப்படுத்துதல், தொடர்புகொள்ளல், திட்டமிடுதல், முடிவெடுத்தல் போன்ற சிந்தனைச் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாகக் குறிப்பது.
உளவியலில் பொதுவான அறிவாற்றல், பாய்ம மற்றும் படிகமாக்கப்பட்ட அறிவாற்றல் (Fluid and Crystallized Intelligence) என இரண்டாக வகுக்கப்படுகிறது. இதில் பாய்ம அறிவாற்றல் என்பது பெற்றுக்கொண்ட அறிவாக அல்லாது புதிய சூழ்நிலைக்கும், சிக்கலுக்கும் ஏற்றவாறு தர்க்கபூர்வமாக சிந்தித்து செயல்படுதலாகும். கணித, அறிவியல், தொழில்நுட்ப சிக்கல்களை தீர்ப்பதில் திறன் பெற இது மிகவும் முக்கியம். படிகமாக்கப்பட்ட அறிவாற்றல் என்பது திறமையையும், அறிவையும், அனுபவத்தையும் பயன்படுத்தும் ஆற்றல். ஆழ்ந்து அகன்ற பொது அறிவு, பரந்த சொல்வங்கி (Vocabulary), தகவல்களை நினைவிலிருந்து மீட்டுப் பயன்படுத்துதல் போன்றவற்றில் இதன் பங்கு அதிகம்.
நரம்பு மண்டலத்தின் தலைமையகமான மூளை என்னும் உயிரியல் உறுப்புதான் அறிவாற்றலின் மையம். தத்துவ ஞானி பிளாடோ மூளையே அறிவாற்றலின் மையம் என்று ஊகித்தார், ஆனால் அவரது சிஷ்யரான அரிஸ்டாட்டில் இதயமே அதன் மையம் என்று கருதினார், காலன் (Galen) என்கிற கிரேக்க ஹிப்போகிராட்டெஸ் வழி மருத்துவர் தான் சண்டையில் அடிபட்டு மூளை சிதைந்த போர்வீரர்களின் சிந்தனைப் புலம் பாதிக்கப்படுவதை கவனித்து, அறிவுச் செயல்பாடுகளில் மூளையின் முக்கியத்துவத்தை முதலில் உறுதி செய்தார்.
பரிணாமத்தின் பாதையில்
பரிணாமத்தின் மிக நீண்ட பாதையில், மனிதனுக்கும் சிம்பன்ஸிகளுக்கும் பொது மூதாதையான ஒரு பேரினக் குரங்கிலிருந்து மனிதன் தன் நெருங்கிய இனமான சிம்பன்ஸிகளிடம் விடைபெற்றுப் பிரிந்து, தனியாகத் தன் பயணத்தைத் துவங்கி இன்று கிட்டத்தட்ட 5-7 மில்லியன் ஆண்டுகள் ஆகிறது. இந்த நீண்ட பரிணாமப் பயணத்தில் இதுவரை மனிதனின் மரபணுத் தொடர் (DNA sequence) சிம்பன்ஸிகளிடமிருந்து சற்றேறக்குறைய வெறும் 1.5% மட்டுமே வேறுபடுகிறது1 (இதில் சில கருத்து வேறுபாடுகளும் உண்டு –மரபணு வேறுபாடு எப்படி கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதை வைத்து).
(Credit: Image: Edwin Hadley, University of Illinois.)
மரபணுத் தொடரில் 99% ஒற்றுமை இருந்தாலும் எது மனிதனை மனிதனாகவும், குரங்கைக் குரங்காவும் வைத்திருக்கிறது என்ற கேள்விக்கு 2002-ம் ஆண்டு வெளிவந்த ஆய்வு முடிவு கூறிய பதில் மிக முக்கியமானது – மனித மூளையில் உள்ள மரபணு செயல்பாடு (Gene activity) தான்!2 இத்தனைக்கும் மனிதனுக்கும், சிம்பன்ஸிக்கும் மூளையில் வெளிப்படும் மரபணுக்களில் (Gene expression) உள்ள வித்தியாசம் மற்ற உள்ளுடல் அங்கங்களில் – அதாவது இதயத்திலோ, கல்லீரலிலோ, சிறுநீரகத்திலோ வெளிப்படும் மரபணுக்களை விடக் குறைவு தான்.(3) ஆனால் அது தான் மனிதனின் அறிவாற்றல் சார்ந்த பரிணாம வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்தது.
மரபணுக்களின் பண்பு வெளிப்பாட்டில் ஆர்.என்.ஏ படியாக்கல் (Transcription) என்ற இடைநிலை உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் சில காரணிகள் ஆர்.என்.ஏ ‘படியாக்கல் காரணிகள்’ (Transcription factors) என்று குறிக்கப்படும். இவற்றின் பங்கும் மனிதப் பரிணாம வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கது என்று நிறுவப்பட்டுள்ளது.(4) உதாரணமாக, ‘ப்ரோடோகாதெரின்’ (Protocadherin) என்கிற புரதத்தின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் காரணியைச் சொல்லலாம். இந்த ப்ரோடோகாதெரின் மூளை வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் மிகவும் அவசியமானது.
பெருமூளை அரைக்கோளங்களைச் (Cerebral hemisphere) சுற்றியுள்ள மடிப்புகள் நிறைந்த சாம்பல் நிறப் பொருள் (Grey matter) என்றழைக்கப்படும் புறணி (Cerebral cortex) மற்ற பேரினக்குரங்குகளை விட மனிதனுக்கு மூன்று மடங்கு அளவில் பெரியது. அதனால் மூன்று மடங்கு நரம்பணுக்களும் (நியூரான்கள்) அதிகம். (மனிதனின் மொத்த உடலுக்குத் தேவைப்படும் ஆற்றலில் ஐந்தில் ஒரு பங்கு இப்பெரிய மூளையின் இயக்கத்திற்குத் தேவைப்படுகிறது. மூளையின் மிகுதியான ஆற்றல் தேவையை ஈடுகட்டும் நோக்கம் மறைமுகமாக மனிதனின் அறிவாற்றலை பெருக்க உதவியது. அதாவது அத்தகைய அதிக ஆற்றலைத் தரும் மாமிசத்தை வேட்டையாடவே ஆதிமனிதன் கற்களை செதுக்கி ஆயுதமாகப் பயன்படுத்த பரிணாமத்தால் உந்தப்பட்டான் என்னும் ஒரு ‘வேட்டைக் கருதுகோளு’ம் உண்டு (Hunting hypothesis)). இந்த சாம்பல்நிறப் பகுதி தான் சிந்தனை, விழிப்புணர்வு, மொழி, கற்றறிதல், பகுத்தறிதல் போன்ற மனிதனை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்தும் முக்கியப் பண்புகளை நிர்ணயிக்கிறது. சரி, இங்கே மரபணுக்களுக்கு என்ன முக்கியத்துவம்? என்று கேட்டால், பதில் ‘மிக முக்கியமான பங்கு மரபணுக்களுக்கு உண்டு’ என்பதே. உதாரணமாக HAR1F என்னும் ஒரு மரபணு மனிதக் கருவளர்ச்சியின் ஏழாவது வாரத்தில் மிக அதிகமாக வெளிப்படுத்தப்படுகிறது. இந்த மரபணு நேரடியாக எந்தப் புரதத்தையும் குறிப்பதில்லை, பதிலாக மூளைப் புறணியில் (Cortex) நியூரான் அடுக்குகளை உண்டாக்குவதிலும், மூளையின் வடிவமைப்பைக் கட்டமைப்பதிலும் பங்குபெறும் இதர புரதங்களுக்கான மரபணுக்களின் வெளிப்பாட்டை மேம்படுத்துகிறது. மொத்தம் 49 மரபணுப் பகுதிகள் இவ்வாறு மனிதர்களில் சிம்பன்ஸிக்களை விட மிக வேகமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது5. அதில் ஒன்று தான் மேற்கண்ட HAR1F (மனிதர்களில் முடுக்கிவிடப்பட்ட பகுதி – Human Accelerated Region – HAR) மரபணு. மீதமுள்ள 48 பகுதிகளையும் அவற்றின் பண்புகளையும் கண்டறியும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மனித இனத்தில்
இதுவரை மனிதன் அபாரமான மூளை வளர்ச்சி பெற்று தனது நெருங்கிய இனமான சிம்பன்ஸிக்களிலிருந்து வேறுபட்டு பரிணாமத்தின் பாதையில் விரைவாக முன்னேற மரபணுக்களின் பங்கையும் முக்கியத்துவத்தையும் பார்த்தோம். இனி, மனித இனத்துக்குள் அறிவாற்றலை குறிக்கும் ஒரு காரணியாக மரபணுக்களின் பங்கு என்ன என்பதைப் பார்ப்போம்.
‘நவீன மரபியலின் தந்தை’ என்று போற்றப்படும் ஆராய்ச்சியாளரான மெண்டல் (Gregor Mendel), பட்டாணிச்செடிகளை வைத்து ஆராய்ந்து, சில பண்புகள் மரபாக தலைமுறைகளுக்குக் கடத்தப்படுகின்றன என்ற தனது புகழ்பெற்ற கண்டுபிடிப்பை வெளியிடுவதற்கு ஒரு வருடம் முன்பே 1865 ல் ஃபிரான்ஸிஸ் கால்டன் (Francis Galton) என்பவர் உயர்தள அறிவாற்றலும் மற்றும் சில திறன்களும் மனிதர்களில் மரபுப்பண்பாகக் கடத்தப்படுகின்றது என்பதைக் கண்டறிந்து இரண்டு ஆராய்ச்சிக்கட்டுரைகளையும் வெளியிட்டார்.
இவர் தான் “Nature Vs Nurture” என்கிற பதத்தையும் அந்த விவாதத்தையும் தொடங்கிவைத்தவர். கால்டனின் கண்டுபிடிப்புகளால் உந்தப்பட்டு ஸ்பியர்மேன் (Charles Spearman) என்பவர் பொதுவான அறிவாற்றல் காரணி (Genaral Intellingence factor, g ) என்கிற பதத்தை முன்மொழிந்தார். அவரது கூற்றுப்படி வாய்மொழி (Verbal), எண்கணிதம் (Arithmetic), விழிப்புலம் (Visual), முப்பரிமாண சிந்தனை (Three dimensional thinking) போன்ற தனித்தனியான அறிவுத்திறன் சோதனைகளில் சிறப்பாக தேர்வுபெறுபவர்கள் இவற்றுக்குள் தொடர்புறக்கூடிய மைய இழையாக அடிப்படையான (அ) பொதுவான ஒரு அறிவாற்றல் உடையவர்களாக இருபார்கள். இந்த ‘அறிவாற்றலின் சாரம்’ அல்லது அடிப்படையான அறிவாற்றல் மரபாகக் கடத்தப்படக்கூடியது. இந்த கருதுகோளுக்கு எதிராக சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இன்றும் இதுவே பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதும் ஆகும்.
மூலக்கூறு உளவியல் மற்றும் நடத்தை மரபியல் துறைகளில் சில பண்புகளின் மரபுத்தன்மையை ஆராய்ச்சி செய்ய இரட்டையர்களையே மாதிரிகளாகக் கொள்வது வழக்கம். ஒருவித்து இரட்டைகளில் (Monozygotic twins) இருவருக்கும் மொத்த மரபணுக்களும் 100% ஒத்ததாக இருக்கும். இருவித்து இரட்டைகளில் (Dizygotic twins) 50% மரபணு ஒற்றுமை இருக்கும். எனவே ஒரே சூழ்நிலையிலோ அல்லது பிரிந்து வெவ்வேறு சூழ்நிலைகளிலோ இந்த இரட்டைகள் வளர நேர்கையில், அவர்களில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது நீடிக்கும் ஒற்றுமைகளை ஆராய்வதன் மூலமாகப் பண்புகளை நிர்ணயிப்பதில் மரபணுக்களின் பங்கையும், சூழ்நிலை, சமூக தாக்கத்தையும் அறியலாம். அதே போல அல்ஸைமர் (Alzheimer’s), பார்க்கின்சன் (Parkinson’s), ஹண்டிங்டன் (Huntington’s) போன்ற நரம்பு குன்றல் நோய்கள் (Neuro degenerative diseases) அல்லது ஸ்கீசோஃப்ரீனியா (Schizophrenia) போன்ற மனநல குறைபாடுள்ளவர்களின் மரபணுவை (DNA), ஒத்த வயதும் சூழலும் கொண்ட ஆரோக்கியமானவர்களின் மரபணுவோடு ஒப்பிட்டு, ஆரோக்கியமானவர்களிடம் இல்லாத – அதே சமயம் மூளை குன்றல் நோயுள்ளவர்களிடம் இருக்கிற மரபணு மாற்றங்களைக் கண்டுபிடித்து அதன் மூலமாக மூளைச் செயல்பாட்டுக்கும், அறிவாற்றலுக்கும் உள்ள மரபுக் காரணிகளை விளக்கும் ஆராய்ச்சிகள் ஏராளமாக நடந்துள்ளன. இவை ஒரு மறைமுகமான வழிமுறை தான்.
நேரடியாக அறிவாற்றலுக்கான மரபணுக்காரணிகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இதுவரை நடந்த ஆராய்ச்சிகளில் எந்த ஒரு குறிப்பிட்ட ஒற்றை மரபணுவும் அறிவாற்றலை நேரடியாகக் குறிப்பதாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏனென்றால் அறிவாற்றல் என்பது பல்வேறு திறன்களை ஒட்டுமொத்தமாகக் குறிப்பது. அது ஒரு சிக்கலான பண்பு. எனவே பல்வேறு மரபணுக்கள் (Polygenic) தொடர்புடையதாக இருக்கும், ஒரு மனிதனின் ஒட்டுமொத்த மரபணுக்களில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் அறிவாற்றலோடு தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இருந்தாலும் சமீபத்திய சில முக்கியமான ஆராய்ச்சி முடிவுகளை தெரிந்துகொள்வது இந்தத் தலைப்பின் நோக்கத்திற்கு உதவும். எடுத்துக்காட்டாக, CHRM2 என்னும் மரபணுவின் புரதம் நரம்பணுக்கள் மின்னதிர்வை ஏற்று சமிக்ஞைகளை கடத்துவதில் பங்கு வகிக்கிறது. கற்றல் திறன், ஞாப சக்தி ஆகியவற்றுக்கு முக்கியமானது. 2007ம் ஆண்டு 200 குடும்பங்களைச் சேர்ந்த 2,150 தனிநபர்களின் CHRM2 மரபணுவில் உள்ள ‘மரபணு அடையாளங்களையும்’ (Genetic markers) அவர்களின் அறிவுத்திறன் அளவீட்டு சோதனையில் (IQ test) பெற்ற மதிப்பெண்களையும் ஒப்பிட்டதில், CHRM2 மரபணு அறிவாற்றல் திறனில் தாக்கம் செலுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது (6). இதே மரபணு இதற்கு முன்பும் பலமுறை பல்வேறு நாடுகளில் செய்த ஆய்வுகளிலும் அறிவுத்திறன் அளவீட்டுடன் உள்ள தொடர்பு நிரூபிக்கப் பட்டுள்ளது. இன்னொரு நரம்பு மண்டல மரபணுவான STX1A, நரம்பணுக்களின் மின்வேதி சமிக்ஞை பரிமாற்றத்தில் பங்குபெறும் மிக முக்கியமான புரதத்தைக் குறிப்பது. STX1A மரபணுவின் வெளிப்பாடு வில்லியம்ஸ் ஸிண்ட்ரோம் என்னும் மனவளர்ச்சிக் குறைபாட்டு நோய் உள்ளவர்களிடம் மிகக் குறைவாக உள்ளதும், அது அவர்களின் குறைவான அறிவுத்திறன் அளவீட்டுடன் (IQ-60) மிகவும் தொடர்புள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது7. சாதாரணமான ஒரு மனிதனின் அறிவுத்திறன் அளவீட்டு சராசரி 100 இருக்கும் (அதிகபட்ச IQ விற்கான கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற மரிலின் சாவன்துக்கு அவருடைய பத்தாவது வயதில் IQ-228 இருந்தது!). இதன் மூலம் அறிவாற்றலுக்கும் மரபணுவுக்கும் நேரிடையான தொடர்பு உள்ளது என்பது வில்லியம்ஸ் ஸிண்ட்ரோமுக்கும் STX1A மரபணுவுக்கும் உள்ள தொடர்பின் வழியாக நிரூபிக்கப்பட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன் (ஆகஸ்டு, 2011) வெளியிடப்பட்ட முக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரை மரபணுக்களுக்கும் அறிவாற்றலுக்கும் உள்ள தொடர்பை மிக நேரடியாக நிரூபிக்கிறது (8). இதற்கு முன் வெளிவந்த ஆய்வுகள் பெரும்பாலும் மூளை சார்ந்த குறைபாடு நோயுள்ளவர்களையும், ஆரோக்கியமானவர்களையும், அல்லது இரட்டைகளையும், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளையும், அவர்கள் பெற்ற/வளர்ப்பு பெற்றோரையும் ஒப்பிட்டு அறிவாற்றலின் மரபுப் பண்பை நிரூபித்துவந்தன. ஆனால் இந்த ஆய்வு ஆரோக்கியமான 3511 (ஆண், பெண் இருபாலரும்) பேரின் மரபணுவில் மொத்தம் 5,49,692 மரபணு அடையாளங்களைப் பரிசோதித்ததன் மூலம் மனிதர்களுள் படிகமாக்கப்பட்ட-அறிவாற்றலில் காணப்படும் வேறுபாடுகளில் 40%ம், பாய்ம-அறிவாற்றலில் காணப்படும் வேறுபாடுகளில் 51%மும் அவர்களின் மரபணு வித்தியாசங்களாலேயே தீர்மாணமாகின்றன என்று நிரூபிக்கிறது. ஒட்டுமொத்த மரபணுவையும் (DNA) கொண்டு ஆய்வு செய்யப்பட்டதால், எந்த குறிப்பிட்ட மரபணு (Gene) அறிவாற்றலில் பங்கு வகிக்கிறது என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியாவிட்டாலும், மரபணுக்களின் பங்கையும் அறிவாற்றலின் மரபயிலையும் (Genetics of Intelligence) நேரடியாக தெரிவிப்பதால் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மூளையின் அளவையும், நரம்பணுக்களின் வலைப்பின்னலையும் கட்டுமானத்தையும் நிர்ணயிப்பதில் மரபணுக் காரணிகள் வகிக்கும் இன்றியமையாத பங்கையும், மூளையின் அளவு எப்படி அறிவாற்றல் வளர்ச்சியில் முக்கியத்துவத்துவம் வாய்ந்தது என்பதையும் முன்னர் கண்டோம். மூளையின் செயல்பாடுகளைப் படம் பிடிக்கும் அதிநவீன கருவிகள் (HARDI) மூலம் 23 ஜோடி ஒருவித்து இரட்டையர்கள் மற்றும் 23 ஜோடி இருவித்து இரட்டையர்களின் மூளையைப் படம் பிடித்துப் பார்த்ததில் அவர்களின் மூளை நரம்பணு இழைகளைப் (Axons) போர்த்தியுள்ள மயலின் (Myelin) என்னும் கொழுப்புப்-புரதத்தின் தடிமனைப் பொறுத்து அவர்களின் மூளை செயல்பாட்டின் வேகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நல்ல தடிமனான மயலின் போர்வை இருந்தால் கட்டளைகளையும், தகவல்களையும் மூளை மிகவேகமாகக் கையாளும். அவர்களின் முப்பரிணாம சிந்தனை, விழிப்புலம் சார்ந்த செயல்பாடும், தர்க்கமும் எல்லாம் இதை அடிப்படையாகக் கொண்டது. மயலின் போர்வையின் வளர்ச்சியைக் குறிக்கும் மரபணுக்கள் தான் இதைத் தீர்மாணிக்கின்றன. இருவித்து இரட்டைகளில் இந்த மயலின் போர்வையின் தடிமனில் வித்தியாசம் இருந்தது (ஏனென்றால் அவர்கள் 50% மட்டுமே மரபணு ஒற்றுமை கொண்டவர்கள், எனவே பெற்றோர்களிடமிருந்து மரபாகக் கடத்தப்படும் பண்பு வேறுபடலாம்) கண்டுபிடிக்கபட்டதன் மூலம் மூளை-அறிவாற்றல் செயல்பாடு மரபாகக் கடத்தப்படும் தன்மை புதியமுறையில் நிரூபிக்கப்பட்டது (9). இவையும் இன்னும் ஏராளமான ஆராய்ச்சிகளும் அறிவாற்றலில் சமூகத்தின்/சூழலின் பங்கிருந்தாலும் முதல் மற்றும் முக்கியமான பங்கு பாரம்பரியமாகக் கடத்தப்படும் மரபணுக்களே என்ற கருத்தை அறிவியல் பூர்வமாக முன்வைக்கின்றன.
எதிர்காலம்
பரிணாமத்தில் மனித இனத்துக்குச் சிறப்புப் பண்பாக அமைந்த மூளை வளர்ச்சியையும், அறிவாற்றலையும் குறிக்கும் இந்த மரபணுக்கள் மனித இனம் முழுமைக்கும் பொதுவாகத் தானே இருக்கவேண்டும்?, அதனால் எல்லா மனிதருக்கும் அறிவாற்றலும் சமமாகத்தானே இருக்க வேண்டும்?, ஆனால் நடைமுறையில் அப்படி இல்லையே? என்ற கேள்விகள் எழுகிறது. இங்கே தான் உளவியல் மற்றும் சமூகவியல் நோக்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஒருவித்து இரட்டைகளையும், இருவித்து இரட்டைகளையும், அவர்களின் அறிவுத்திறன் அளவீடு, வளர்கின்ற குடும்ப மற்றும் சமூகச்சூழல், சத்தான உணவு, பெற்றோரின் கல்வியறிவு மற்றும் அறிவாற்றல், கல்வி வாய்ப்புகள் போன்றவற்றை வைத்து சமூகவியலாளர்களும் பல்வேறு ஆய்வுகளைச் செய்து அறிவாற்றலில் சூழ்நிலையின் பங்கையும் முக்கியத்துவத்தையும் தெளிவாக்கி வருகிறார்கள்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் அறிவாற்றலின் மரபுத்தன்மை குறித்து ஆராயும் மூலக்கூறு மரபியல் ஆராய்ச்சிகள் வேகம் பெற்று வருகின்றன. இப்போதும் இது ஒரு வளரும் துறையே. இது வரை கண்டுபிடிக்கப் பட்டுள்ளவையும் ஒப்புநோக்க அடிப்படையானதே. இந்தத் துறையின் எதிர்காலப் போக்கை இதை போன்ற இன்னொரு துறையின் வளர்ச்சியை வைத்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம். தொற்று நோய்களுக்கான ஒற்றைப் புறக்காரணமாக நுண்கிருமிகளைக் கண்டுபிடித்த ஆரம்ப அறிவியல் காலங்களில், நோய்க்கூறு அறிவியல் (Immunology) வேகமாக வளர்ந்தது. ஆனால் ஒரு நோய்க்கிருமி ஒரே சூழ்நிலையில் வாழும் அனைவரையும் தாக்குவதில்லை என்பதும், ஒரு நோய்க்கிருமிக்கெதிரான தடுப்பூசி (Vaccine) அந்த நோய்கெதிரான பாதுகாப்பை எல்லா இன மக்களிலும் வெற்றிகரமாக உண்டாக்க முடிவதில்லை என்ற உண்மையும் அறிவியலாளர்களை மனிதர்களின் மரபணுக் கட்டமைப்பை நோக்கிச் சிந்திக்கச்செய்தது. நோயெதிர்ப்பில் ஈடுபடும் மரபணுக்களும், அதில் ஏற்படும் மாற்றங்களும் தான் ஒரு மனிதனுக்கு குறிப்பிட்ட நோய் ஏற்படுவதற்கு முதற்காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. (தொற்றுநோய்கள் மட்டுமல்ல உடற்செயலியக்கம் சார்ந்த எல்லா குறைபாடுகளுக்கும் மரபியல் முன்சார்பு உண்டு. எ.கா. இதயநோய், சிறுநீரக பாதிப்பு, சர்க்கரைவியாதி, புற்றுநோய்…).
அந்த மரபணுக்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அப்படியே கடத்தப்படுவதால், பிறப்பிலேயே சில நோய்கள் வருவதற்கான மரபியல் முன்சார்புகள் (Genetic predisposition) மனிதர்களில் உண்டு என்பது நிரூபிக்கப்பட்டதும் நோய்க்கூறியல், நோய்க்கூறு மரபியலாக வளர்ந்தது (Immunogenetics). பின்னர் இந்த மரபணுக்கள் ஒரு குறிப்பிட்ட மனித இனத்துக்கோ (Race), இனக்குழுவுக்கோ (உதாரணம்: சாதிகள்) பொதுவானவை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது (Population-Immunogenetics). மனிதனின் மொத்த மரபணுத் தொடரும் வரிசைப்படுத்தபட்டபின் (Human Genome Sequencing) இன்னும் வளர்ந்து, ஒரு தனிமதனின் ‘நோய்க்கூறு ஜாதகத்தை’க் (Immunological Horoscope; என்னென்ன நோய்கள் எதிர்காலத்தில் வர வாய்ப்புள்ளது, எவ்வாறு அதைத் தடுத்துக்கொள்ளலாம்) கணிப்பதிலும், ஒவ்வொரு தனிமனிதனின் மரபணுக் கட்டமைப்புக்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட மருத்துவம் (Personalized Medicine) என்ற நிலையையும் எட்டியுள்ளது. இதே போக்கு அறிவாற்றலின் மரபியலுக்கும் பொருந்தும்.
இப்போது அறிவாற்றலுக்கான மரபணுக் காரணிகளைக் கண்டறிவதில் வெற்றி பெற்றுள்ள இத்துறை பின்னர் ஒரு இனத்திலோ, சமூகத்திலோ அந்த மரபணுக்களின் பரவலை (Prevalence) ஆராய்ச்சி செய்யலாம். பின்னர் தனிநபரின் மூளை – அறிவுச் செயல்பாட்டை அல்லது நோய் வாய்ப்புகளை முன் கூட்டியே கணித்து முன்னேற்ற, பாதுகாக்க வழிசொல்லலாம். உதாரணமாக நாம் மேலே பார்த்த மயலின் போர்வையின் தடிமனை அதிகரிக்க, அதன் மரபணுவை வெளிப்பாட்டை அதிகரிக்கும் மருந்தை அல்லது மரபணு சிகிச்சையைக் கண்டுபிடிப்பதன் வழியாக பிறவியிலேயே வில்லியம்ஸ் சிண்ட்ரோம் வருவதற்கான மரபியல் முன்சார்பு இருக்கும் குழந்தைகளைக் காக்கலாம் (சாதாரண அறிவுத்திறன் உள்ள குழந்தைகளுக்கு அறிவுத்திறனை அதிகப்படுத்தலாம்!!)  இப்போதைக்கு மூளை-அறிவாற்றல் வளர்ச்சிக் குறைவு நோய்களை முழுமையாக அறிந்துகொள்ளவும், சிகிச்சை முறைகளைக் கண்டுபிடிக்கவும் தான் அறிவாற்றல் மரபியல் துறை மரபணுக் காரணிகளைக் கண்டறிய முயற்சிக்கிறது.
அறிவாற்றலின் மரபுத் தன்மை என்னும் கருத்து சமூகவியல் பார்வையில் மிக அபாயகரமான கொள்கையாக இருக்கலாம். காரணம்- பன்னெடுங்காலமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் மரபான பண்பாக அறிவாற்றல் (இன்னும் பல பண்புகள்) கருதப்பட்டு, அது ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ அல்லது வம்சாவழியினருக்கோ சொந்தமானதென்றும் அதனால் அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டும் பிறர் தாழ்வாக நடத்தப்பட்டும் உருவான ஏற்றத்தாழ்வுகளே. சமூகவியல், சமவாய்ப்பின் மூலம் எல்லோருக்கும் வாய்க்கப்பெறுவதும், வளர்த்துக் கொள்ளக் கூடியதும் தான் அறிவாற்றல் என்று நிரூபிப்பதன் மூலம் சமுக சமநிலையை வலியுறுத்த விழைகிறது. சமூகவியல் என்பது சட்டம், மொழியியல், அரசியல், தத்துவ, கலாச்சார விழுமியங்களையும், அறிவியலின் முடிவுகளையும் சற்றே மழுங்கடித்துச் சேர்த்து ஒன்றிணைத்து அலசி மனித சமூகத்தை, நடத்தையை, சமூக அமைப்பு முறைகளை புறவயமாக விளக்க முயல்வது. ஆனால் அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் கூர்மையான, புறவயமான, நிரூபிக்கக் கூடிய உண்மைகளை மட்டும் தரமுடியும். அதை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது தான் பரிணாமத்தில் சிறப்புப் பரிசாக நமக்குக் கிடைத்த அறிவாற்றல் சார்ந்த மரபணுக்களுக்களை ஒவ்வொரு செல்லிலும் பொதிந்து வைத்திருப்பதை அர்த்தமுள்ளதாக ஆக்குவதாகும்!
- See more at: http://solvanam.com/?p=16486#sthash.3X9oOYk1.dpuf