Sunday, February 23, 2014

தோற்றவனின் ரொட்டி துண்டுகள்....

தோற்றவனின் ரொட்டி துண்டுகள்
பறிக்கபடுகின்றன
கயவர்களால் அல்ல காரியக்காரர்களால்.....

தோற்றவன் தேடுகிறான்
தோற்றது எங்கே என்று
அவன் அதிகாரத்திற்கு துதி பாடவில்லை
ஆனாலும் தோற்கிறான்
அதிகார துதிபாடுபவர்களிடம்.....

தோற்றவன்
வேட்டை மிருகத்தை தவறவிடவில்லை
தடுமாறினான் துதிபாடியவனின்
காய் நகர்த்தலில்....

தோற்றவன் வலிகளை வர்ணிக்க வேண்டுமானால்
தோற்றது அவன் திறமையின் வெளிப்பாடு
அவன் திறமையில்லை.....

தோற்றவன் களைத்து போகவில்லை
அவன் திறமையும் தூங்கவில்லை
காரணம்
பத்தவில்லை இந்த ரொட்டி துண்டுகள்............

No comments:

Post a Comment