கடக்கும்
நொடிகளிலும் நிமிடங்களிலும்
கிடைக்கும்
அனுபவங்களில்
என்னை செதுக்கி
விடை தேடி ஓடுகிறேன்
கேள்விகளையும் சுமந்துகொண்டு!
எல்லைக்கோடுகளை
உடைத்து விட்டு
எல்லையற்ற வானத்தில்
திரியும் பறவை இவன்!
இந்த உலகம் என்னிடம்
எதையோ நிரூபிக்க
முயன்று கொண்டிருக்க
நான்
அதனிடம் தோற்று போகிறேன்...!
இதுதான் என்
கடைசி முயற்சி என்று,
ஒவ்வொரு முறை தோற்கும்போதும்,
மீண்டு எழுவதற்கு பழகியிருந்தேன்..!
இருள் விலகி ஒளி பிறக்கும்
என நம்பிக்கையில்
இல்லையெனில்
இருளையே ஒளியாக்கி
பயணங்களை தொடர்கிறேன்!
எல்லா வெளிச்சங்களும்
இருளின் பிரதிபலிப்பாக
இருக்கும்போது இவன் மட்டும்
விதிவிலக்கா என்ன!
- சத்யா...
No comments:
Post a Comment