Friday, April 18, 2014

வாரிசு இல்லாத விவசாயம்.....

வாரிசு இல்லாத விவசாயம்.

பரம்பரையாய் வந்த வயல் காட்டில்
விவசாயம் செய்து வயலுக்கு வடக்கே
தெற்கபார்த்து வீட்டை கட்டி

வந்த வருமானத்தில் திருமனம் செய்து
ஆசைக்கும் அஸ்த்திக்கும் பிள்ளையை பெற்று
அரசு தரும் உதவி தொகையில் படிக்கவைத்தான் என் பாட்டன்...

பட்டனம் வந்து வேலை பார்த்து
படித்த படிப்பை பண்ணாட்டு
முதலாலியிடம் செலவு செய்து

வந்த வருமானத்தில் ஒரு வீட்டை பட்டனத்தில் வாங்க
என்னை வளர்த்த விவசாயத்தை மண்ணுக்குள் புதைத்தேன்.
என் வாரிசை இங்கே படிக்கவைத்துவிட்டு

எனக்கு சோறுபோட்ட விவசாயதிற்கு வாரிசு இல்லாமல்
வானம் பார்த்த பூமியாய் வரண்டு கிடக்கிறது.....

பன்னாட்டு முதலைக்கு இரையாகும் என் படிப்பை விட
இன்றும் விவசாயத்தை பாதுகாக்கும் ஒவ்வொறு
விவசாயியும் உலகத்தின் முதல் பணக்காரணும்
சிறந்த முதலாளியும் அவன் தான்...

நட்புடன்

சத்யா

No comments:

Post a Comment