Monday, May 27, 2013

மனிதனாய் வாழ உலகைப் படி.....

அறிவைத் தேடி
ஆழமாய் படி

இன்மாய் வாழ
இளமையில் படி

இருக்கின்ற வரை
இயன்றவரை படி

இல்லாதோருக்கு
உதவிட படி

ஈன்றவர்களின் பெருமையைக்
காத்திட படி

தெரியாதோருக்கு
தெளிவுபடுத்திட படி

இயலாமையிலும்
கொடுத்து உதவிட படி

ஒற்றுமையாய் வாழ
அமைதியைப் படி

உழைப்பைச் சுரண்டும்
ஆதிக்கத்தைப் படி
உண்மையா, வேதமா?
உணர்ந்து படி

கண்ணுக்குத் தெரிந்த
உண்மைகளைப் படி

காட்டில் வாழும்
உயிர்களைப் படி

மொழியைக் காக்க
தெளிவாய்ப் படி

மண்ணைக் காக்க
மாண்புடன் படி

இனத்தைக் காக்க
வீரத்தைப் படி

மனிதனாய் வாழ
உலகைப் படி

No comments:

Post a Comment