Sunday, January 8, 2017

துருவங்கள் பதினாறு - என் பார்வையில்

#D16...  படம் ஆரம்பித்து ஒவ்வொரு சீன்லயும் இது ஏன்னு யோசிப்பதற்குள் அடுத்த சீனில் நம்மை கட்டிப்போட வைத்து...  நடந்துகொண்டிருக்கும் காட்சியின் பதிலை அதற்கும் முன் காட்சியிலேயே சொல்லியிருப்பது இயக்குநரின் அசாத்திய திறமைதான்...

எளிமையான கதைதான் என்றாலும் கதையை முன்னும் பின்னுமாகக் கலைத்துப் போட்டுப்  பாத்திரங்களின் பார்வையில் கதையை சொல்லி  குழப்புவதற்காக மெனெக்கெட்டுச் செய்ததுபோல இல்லாமல் தொடக்கத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே கதை புரியும் எனும் அளவுக்குத் துல்லியமாக வேலைபார்த்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன்.

ரகுமான், ஒரே ஒரு சீனில் மட்டும் வரும் டெல்லி கணேஷ் தவிர மீதி அனைவரும் புதுமுகங்கள்... ரகுமானின் பார்வையில் கதை நகர்தலில் லாஜிக் மிஸ்டேக் என என நினைக்கும் போது கிளைமேக்ஸ் டிவிஸ்ட் ஆக வருவது

என்னோட point of view வில் நான் நல்லவனா இருந்தாலும் உன்னோட point of view  ல நான் கெட்டவனா தெரிஞ்சா நான் காரணமாக முடியாதுன்னு வழக்கமான த்ரில்லிங் படங்களின் கிளைமேக்ஸ் என்றாலும் 21 வயதான கார்த்திக் நரேன் அதை திறம்பட கொண்டு சென்றுள்ளார்.

ஆங்கில படங்களை பார்த்து பார்த்து குழம்பி கிடந்த நாம்  தமிழ் படத்தையும் பார்த்து குழம்பி ரசிக்க வேண்டும் என்றால் தாராளமாக இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்...

#வாழ்த்துக்கள் துருவங்கள் பதினாறு & Team...

No comments:

Post a Comment